UNLEASH THE UNTOLD

ரமாதேவி ரத்தினசாமி

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

   

 கம்போடியாவில் ஆட்சி செய்த 30 மன்னர்களின் பெயர்களில் ‘வர்மன்’ என்கிற பெயர் தொட்டுக்கொண்டிருப்பது, தமிழின வழித் தோன்றலான நந்திவர்மனைக் குறிப்பிடும் பெயர் என்கிற கருத்தும் உள்ளது. பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்பு நீடித்தது. தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்குப் பெரிய கோயில் கட்டியபோது, அந்தக் கோயில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர் சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.           

வரலாற்றில் கம்போடியா

கம்போடியாவில் 2009இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வு முடிவுகள், கம்போடியாவின் வரலாற்றை கற்காலத்துக்கு  எடுத்துச் சென்று, இப்பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு மட்பாண்டங்கள் தயாரித்து பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. கற்கால வேட்டைக்குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வரையிலான மனித நாகரிக வளர்ச்சியின் சான்றுகள் அகழ்வாய்வின் முடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.

கனவு தேசம் நோக்கி

ஒரு மனிதனின் கற்பனை ஆகப்பெரும் கலைவடிவமாய், உலகின் பிரமாண்டமாய் வியாபித்து நிற்பதைக் காணவேண்டுமென்ற பித்து. கண் மூடினால்  கலைநயமிக்க கட்டிடங்கள் கனவுகளாய் உலா வர,  கால எந்திரத்தில் பின்னோக்கிப் போய், அந்த பிரம்மாண்டத்துக்குள் நான் உலவிக்கொண்டிருக்கிறேன்.

கார்த்தீஸ்வரி

“இல்ல டீச்சர்… செத்துப் போயிட்டா…” எல்லோரும் அமைதியாய் இருக்க, ஒரு குட்டி வாண்டு கத்தியது. வசந்திக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. என்ன நடந்தது? ஏதும் விபத்தா? விசாரித்த போது, எதையும்  மறைக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் கதை கதையாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

மல்லிகா

“சாதி கெட்ட நாய்களுக்கு எங்க சாதியில் பொண்ணு கேட்குதோ? ஒண்ணுந்தெரியாத எம்மவளை மயக்கி இழுத்துட்டுப் போகச் சொல்லிட்டு இப்ப குடும்பமா சேர்ந்து நாடகமாடறீகளோ..? வயிறெரிஞ்சி சொல்றேன்…குடும்பத்தோட நாசமாப் போயிடுவீங்க”, என சாபமிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்.

சோலையம்மாள்

ஒருநாள் அவன் எண்ணிலிருந்து இவளுக்கு வாட்சப்பில் செய்தி வர ஆர்வமாய் திறந்து பார்த்தவளின் உடல்  குலுங்கியது. அன்றொருநாள் அம்மாவின் போனில் பார்த்ததுபோலவே ஆபாசமான படங்கள். ஆனால் அன்றைய அருவருப்பு இப்போது இல்லை. வாய் தன்னிச்சையாக “ச்சீய்…” என்றாலும், அந்த வயதிற்கேயுரிய ஆர்வத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தாள். இதழ்களில் அவளையுமறியாமல் புன்னகை வழிந்தது. ஒரு ஹார்ட்டின் மட்டும் அனுப்பினாள். 

நளினி

“அதுசரி… படிக்கச்சொல்ல வேண்டிய டீச்சரே இப்படிச்சொன்னா வெளங்கிப்போயிடும், கோலமும் அலங்காரமும் தான் நாளைக்கு அவளுக்கு சோறு போடப்போகுதா என்ன?”



காளீஸ்வரி

When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…