UNLEASH THE UNTOLD

Top Featured

எல்லாரும் கொண்டாடுவோம்!

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?

இயற்கை என்பது அன்னையா, தந்தையா?

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் - 2

ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.

கலகப் புத்தகம்

மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.

கோடை விடுமுறைக்குத் தயாரா?

இந்தியாவில் ஹோம்ஸ்டே, ஹாஸ்டல்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் கொண்ட தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றின் ரிவ்யூக்களை நிதானமாகப் படித்துப் பார்த்தாலே இதை நடத்துபவர் பற்றிய தகவல்களையும் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும். புதிய அனுபவங்களைத் தேடி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில ஆயிரங்கள் அதிகம் செலவானால் பரவாயில்லை என்போர் இத்தகைய தங்குமிடங்களைத் தவிர்த்து வழக்கமான ஹோட்டல்களைத் தேர்வு செய்வதே நல்லது.

<strong>மனிதநேயத்தை மறக்காத இயற்பியலாளர்</strong>

நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

<strong>எக்காலும் ஏய்ப்பில் தொழில்</strong>

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்

மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.