UNLEASH THE UNTOLD

மோகனா சோமசுந்தரம்

புடவையிலிருந்து சுடிதாருக்கு மாற்றிய அறுவை சிகிச்சை

21 நாள் இடைவெளியில் கீமோதெரபி கொடுப்பார்கள். ஒவ்வொரு கீமோதெரபிக்கு முன்னும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ரிப்போர்ட்டை அறுவை சிகிச்ச செய்த மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த செல்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதை அறிந்து, குறைந்திருந்தால் ரத்தம் ஏற்ற வேண்டும். எனக்கு ஒருமுறைகூட கீமோதெரபி கொடுக்கும்போது, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகவில்லை. தினமும் கீரை சாப்பிட்டேன். நல்ல புரதச் சத்துள்ள உணவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டேன். நிறைய பழங்கள், ஜூஸ் சாப்பிட்டேன். மீன் தவிர வேறு எந்த அசைவ உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மிளகு காரம்கூடச் சாப்பிட முடியாது. இதனால்தான் நான் ரத்த விருத்திக்கான மாத்திரைகளைச் சாப்பிடவே இல்லை.

ப்ளீஸ், பார்வையாளர்களை அனுமதிக்காதீர்கள்...

எந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் வீட்டுக்குப் பார்க்க வருபவர்கள் மூலம் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இதில் கறாராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

கீமோதெரபி எனும் கடினமான காலம்

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிக்கவே கொடுக்கப்படும். அவை வெவ்வேறு வழிகளில் செயல்படும். பல்வேறு வகையான கீமோ மருந்துகள் உள்ளன. இருப்பினும், அனைத்து கீமோ மருந்துகளும் புற்றுநோய் போன்று வேகமாக வளரும் செல்களைக் கொல்லும். அப்போது நம் உடலில் புதிதாக உருவாகும் செல்களையும் கொன்றுவிடும். இதில் வெவ்வேறு மருந்துகள் புற்றுநோய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களைக் குறிவைக்கின்றன. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எல்லாருக்கும் ஒரே வகையான கீமோதெரபி மருந்துகள் கொடுக்கப்படுவது இல்லை. அவரவருக்கு ஏற்படும் புற்றுநோய் வகை, நிலை குறித்தே கொடுக்கப்படுகின்றன. அதனால்தான் புற்றுநோயாளிகளுக்கு வேதிசிகிச்சையின் போது நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

வலி இல்லா அறுவை சிகிச்சை!

ஒரு மார்பகம் நீக்கப்பட்டு, கட்டுடன் இருந்த கோலத்தைப் படம்பிடிக்கச் சொன்னேன். எனக்குத் துணையாக வந்தவர்கள் அசதியில் தூங்க, நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து முகலாயர்கள் வரலாறு படிக்க ஆரம்பித்துவிட்டேன். 600 பக்கங்களை இரண்டே நாட்களில் படித்துமுடித்துவிட்டேன்.

இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது!

தூக்கம் வரவில்லை. ஒருவேளை இந்தக் கட்டி புற்றுநோயாக இருக்குமோ? ஐயோ… என் நண்பர் அருணந்தி புற்றுநோயால் அனுபவித்த வேதனைகளை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது.

'பாஸிட்டிவ்' கௌசல்யா

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

இறந்த பறவைகளைத் தேடிச் செல்லும் கிருபா நந்தினி

ஒரு பெண் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்குவதே சவால்தான். அதிலும் காட்டில், மலைப் பகுதியில், கிராமத்தில், கடற்கரை ஓரங்களில் பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதும் அங்குள்ள சூழல்களைச் சமாளிப்பதும் சவாலான பணிதான். இறந்த பறவைகளின் காரணம் தேடிச் செல்வது மிகவும் சவாலான பணி.

கரிக்காரன்புதூரிலிருந்து ஒரு ஐஏஎஸ்!

என் கிராமமே என் வெற்றியில் மகிழ்ந்து, பாராட்டு விழா எல்லாம் நடத்தியது. அதனால் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத கிராம மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

மக்களுக்காகப் போராடும் நீலக்குயில்

அன்றைய புதுக்கோட்டை மாவாட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத், நீலாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீலா இருக்கிறாரா?’என்று கேட்டார்.

முகங்கள் - 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளுமை, பெண்களுக்கான ‘மலர்’ அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து, 40,000 பெண்களை வழிநடத்துகிறார் முகங்கள் தொடரின் ஜாண்சிலி