UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

பணம்

பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தான் திரைப்படமாகின. ஆனால், பணம் வெளியாவதற்கு முன்பே, பராசக்தி வெளியாகி விட்டது. பணம்தான் தனக்கு முதலில் கையில் பணம் தந்த திரைப்படம் எனப் பிற்காலத்தில் சிவாஜி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பராசக்தி

மூகத்தைக் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, உன்னால் முடிந்ததை செய்; உன் தங்கைக்காக மட்டுமல்ல ஊரில் இருக்கும் தங்கைகளுக்காகவும் சிந்தி என நாயகனுக்கு அறிவுரை சொல்லும் நாயகி இருக்கும் திரைப்படமும் இமாலய வெற்றி பெரும் என்பதற்கு, இந்த திரைப்படமும் ஒரு எடுத்துக்காட்டு.

கல்யாணம் பண்ணிப்பார்

ஆபாசம் இல்லை. குடும்பப் படம் என்றால், பெண்ணடிமைத்தனம் போன்றவை தலைதூக்கும். அவ்வாறான காட்சியமைப்புகள் இல்லை. இயல்பாகவே சில முற்போக்குக் காட்சிகள், வரதட்சணை குறித்த எள்ளல்கள் உள்ளன. ஆனால் கருத்துச் சொல்வது போன்ற எண்ணமே நமக்கு வரவில்லை.

என் தங்கை

‘ஆடும் ஊஞ்சல் போலே அலையே ஆடுதே’ பாடல் பெசன்ட் நகர் கடற்கரையில் படமாக்கப் பட்டுள்ளது. உவமைக்கவிஞர் சுரதா எழுதிய பாடல் இது. இது தான் அவர் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல். பாடியவர்கள் டி. ஏ. மோதி மற்றும் பி. லீலா

அந்தமான் கைதி

‘வெறிநாய் கடித்ததற்கு நாம் எவ்வாறு பொறுப்பாக முடியும்?’ என ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணைப் பார்த்து, நாயகன் கேட்பது; அவரையே காதலிப்பது போன்ற செயல்கள், அப்போதைய காலகட்டத்தில் முற்போக்கானதாக இருந்து இருக்க வேண்டும்.



சிங்காரி

‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன. 

மோகன சுந்தரம்

‘மோகன சுந்தரம்’ 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  டி.ஆர்.மகாலிங்கம் அளிக்கும் ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்ஸ் அளிக்கும் மோகன சுந்தரம்; கே ஆர் ரங்கராஜுவின் துப்பறியும் நவீனம் எனத் திரைப்படம் தொடங்குகிறது.  நடிகர்கள்  டி.ஆர். மகாலிங்கம்…

பாதாள பைரவி

பாதாள பைரவி 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  விஜயா புரோடக்‌ஷன் தயாரிப்பு பாதாள பைரவி என்ற தலைப்புடன் திரைப்படம் தொடங்குகிறது. கதை நாகேந்திரராவ். பாட்டு வசனம் தஞ்சை ராமையாதாஸ், திரைக்கதை கே.வி. ரெட்டி, BSc…

அம்மா என்பவர் தியாகி?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமணங்கள் இருக்கும். ஆனால், மகனுக்குச் சமைத்துக் கொடுக்க ஆள் வேண்டும், அவன் வெளியில் சாப்பிட்டுச் சிரமப்படுகிறான் எனத் திருமணம் செய்து வைப்பது, எல்லாம் ஒருத்தி வந்தால் சரி ஆகிடுவான் எனத் தீய பழக்கங்கள் கொண்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்றவை எல்லாம் நம் ஊரில்தான் நடக்கும். தீயப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைத்து, எத்தனை பெண்களின் வாழ்வைப் பெற்றோர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்மைச் சுற்றிப் பார்த்தாலேயே தெரியும்.

சர்வாதிகாரி

“நாடு! நாடு நாசமாய் போகட்டும்.  நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். அவர்கள் ஆவேசத்தை வேறு பக்கம் திருப்பி விட்டால்? அதற்கு, ரத்னபுரியின் மீது படையெடுப்பைத் தொடங்க வேண்டும். தாய் நாடு போர் தொடுத்து இருக்கிறது என்ற நிலையில் நம்மை மறந்து விடுவார்கள். இத்திட்டம் புரட்சியைத் தடுக்க மட்டுமல்ல மன்னராட்சியை ஒழித்து, எனது சர்வாதிகார ஆட்சிக்கும் வித்திடும்.”