UNLEASH THE UNTOLD

யாமினி

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

இசையின் முரட்டுத்தனத்தால் என்ன ஆனது?

ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக  எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

சுய நேசத்தில் கவனம் கொள்வோம்!

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

மூன்று விதமான குணாதிசயங்கள்

எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.

கொஞ்சம் மெனக்கெடுங்களேன்...

நீங்கள் மெனக்கெட மெனக்கெட நீங்களும் அவர்களுக்கு முக்கியமானவர்கள் ஆவீர்கள். உங்களுக்காக அவர்கள் மெனக்கெடுவார்கள்.

உங்கள் தேவையை எப்போது பேசப் போகிறீர்கள்?

“நீ பேசத் தயாராகிவிட்டது மகிழ்ச்சியே, ஆனாலும் அது உன் பக்கம் சரியாகிவிட்டதற்கான அறிகுறி. அதைக் கேட்கும் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் புரிதல், வளர்ந்த விதத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆனாலும் அவர்களை அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள். கொஞ்சம் கொஞ்சமாக நீ விரும்பிய மாற்றம் உன் வாழ்வில் வரும்“ என்றார் ஆலோசகர்.

அடுத்தவரின் சுதந்திரத்தையும் மதிப்போம்!

தானும் ராமும் எத்தனை நெருக்கமான நண்பர்கள் என்றாலும் ராமுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை மறந்ததுதான் காரணம். ராம் எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டிய அவசியம் இல்லை, எதைப் பகிரலாம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கும் நட்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. நாம் அனைவருமே அவ்வப்போது தவறும் இடம் இது, நம் அன்பின் ஆழம் காரணமாக அடுத்தவரின் மேல் கண்மூடித்தனமான ஆதிக்கம் செலுத்துவோம், பல நேரம் நம்மை அறியாமலேயே. நல்ல வேளையாக இந்தப் பிணக்கை ராமிடம் காட்டவில்லை. அப்படி நடந்திருந்தால் அந்த அழகிய நட்பில் விரிசல் விழுந்திருக்கும்.

தீர்ப்பு வழங்க நாம் யார்?

நாம் மற்றவரைப் பற்றிய பரிவோடு நடந்து கொள்ளாமல் இருக்கும் போது, அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனம் புண்படும். மனம் அமைதி இன்றி தவிக்கும். குறைந்தபட்சம் நம் மன அமைதிக்காகவாவது மற்றவரிடம் பரிவுடன் இருப்போமே?

உணர்வுசார் நுண்ணறிவு என்றால் என்ன?

நமது மொத்த நாளையும் உருப்படியாகக் கழிக்கப் போகிறோமா அல்லது வீண் மன வருத்தத்தில் கழிக்கப் போகிறோமா என்பது நமது ‘மூட்’ எனும் உணர்வு நிலையைப் பொறுத்துதான். அதையும் அந்த மூடைக் கெடுப்பது காலை உணவான உப்புமா, அலுவலகத்தில் பிழிந்தெடுக்கும் மேலாளர், சரியான சில்லறைத் தராத பேருந்து நடத்துநர், இன்னும் சுத்தம் செய்யப்படாத அலுவலக அறை, காலையில் நேரத்திற்கு எழாத பிள்ளைகள் என்று எளிதான காரணங்கள் போதும். இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கலாம், அது உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கலாம், இந்த அற்ப காரணங்களுக்காக அதைக் கெடுத்துக் கொள்ளலாமா?

மற்றவர் நிலையில் இருந்து பார்த்தீர்களா?

நாமும் அப்படியே ஒன்று யாரையும் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவோம், பொறாமைப்படுவோம், அவரோடு விரோதம் பாராட்டுவோம், இல்லாவிடில் அவருக்கு ஏதோ பிரச்னை நாம் உதவி புரிவோம் என்றெண்ணி அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதவி என்கிற பெயரில் ஓர் ஏழரையைக் கூட்டி, பின்னர் நான் நல்லதுதானே நினைத்தேன் என்று மருகுவோம். ஒன்று அடுத்தவருக்கு வேதனை, அடுத்தது அவரோடு நமக்கும் வேதனை.