UNLEASH THE UNTOLD

யாமினி

பார்வை ஒன்றே போதுமே!

ஹாய் தோழமைகளே, சுய நேசிப்பை பற்றிப் பேசத் தொடங்கினோம். நீங்களே உங்களை நேசியுங்கள் என்று சொல்வது மிக எளிது. ஆனால் எங்கே இருந்து தொடங்குவது? காதலிக்கும் ஒருவரிடம் அவர் அழகைப் புகழ்வதோ, திறமையைப் பாராட்டுவதோ,…

உன்னை நீ ரசித்தால்…

ஹாய் தோழமைகளே, நலம். நலம்தானே? போன அத்தியாயத்தில் சுய நேசத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்போதிலிருந்து என் நினைவில் சுழல்வது விமலா ஆண்ட்டிதான். தினமும் மாலை ஐந்து மணி அளவில் எங்கள் குடியிருப்பில் உள்ள…

காதலே… காதலே…

காதலே… காதலே… தனிப்பெரும் துணையே ! புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே! அனைவரும் நலம்தானே? மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நலம் என்றதும் நமக்குத் தோன்றுவதெல்லாம் உடல் நலம்தான். ஆனால், மனநலமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். மனம்…

வாழ்வு ஒரு முடிவில்லா விளையாட்டு

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து…

எதிர்மறை விஷயங்களைத் தூக்கிப் போடுங்கள்

ஹாய் தோழமைகளே, நலம், நலம்தானே ? ஷைலஜா ஒரு பிரபலமான Motivation Training கம்பெனியின் M.D. அந்த கம்பெனியின் தலைமைப் பயிற்சியாளரும் அவள்தான். அவளது முகம் வராத பத்திரிகைகள் இல்லை. யூடியூபைத் திறந்தால் அவளது…

இசை எதைத் தேர்ந்தெடுத்தாள்?

தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“

இசையின் முரட்டுத்தனத்தால் என்ன ஆனது?

ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக  எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

சுய நேசத்தில் கவனம் கொள்வோம்!

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

மூன்று விதமான குணாதிசயங்கள்

எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.