UNLEASH THE UNTOLD

நட்சத்திரா

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?

ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.

பறிபோகும் ஏழைகளின் உயிர்கள்

“பக்கத்து கம்பெனில பட்டாசு வெடிச்சிடுச்சு” என்று ஒருவர் கத்திக் கொண்டே வந்தார். வெடித்துச் சிதறிய உடலின் ஒரு பகுதிதான் தங்கள் முன் விழுந்தது என்று தெரிந்துகொண்டனர்.

பாதுகாப்பு?

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

மலரும் யாசினியும்

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

சுதந்திரம் என்பது இதுதானா?

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கவே கூடாதா? அவளுக்கென்று நட்பு வட்டம் இருக்கக் கூடாதா? அவளின் அலைபேசியைக்கூட ஆராய்ச்சி செய்யும் ஆண்கள் இருக்கத்தானே செய்கின்றனர். “ஏன், பொண்டாட்டி மொபைல் புருஷன் பார்க்கக் கூடாதா?” என்று ஆதங்கம் வேறு வந்து தொற்றிக் கொள்கிறது ஆண்களுக்கு. மனைவியின் அலைபேசியில் அவளைச் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவள் தோழியரின் அல்லது பணியிடத்தின் ரகசியங்களும் ஒளிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்வதில்லை.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

குடும்பத்திற்கு அப்பால் விரியும் பெண்ணின் உலகம்

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?