UNLEASH THE UNTOLD

இலக்கணம் மாறுதே…

இலக்கணம் மாறுதே... - 3

ரமேஷ் தன்னிடம் அன்பாக இருப்பதில்லை. முகம்கொடுத்து பேசுவதுகூட இல்லை. ஆனால், இப்போது ரமேஷ் அடுத்த நபரிடம் கட்டிய பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசுவான் எனவும் தெரிந்தது. ‘ஐயோ, இந்தாள நம்பியா நான் புள்ள பெத்துக்கிட்டேன்… கடவுளே’ என நினைக்கையிலே, மனமும் உடலும் வலித்தது.

இலக்கணம் மாறுதே... 2

அதே ஆபிசில் தங்களுடன் ஒருத்தியாக வேலை பார்த்த கீர்த்தியும் அவளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட மோகனும், ஷாலினியின் ஞாபகத்துக்குள் வந்து போனார்கள். மோகன் ஆர்த்தியைப் போட்டுவிட்டதாகச் சொல்லி, அதற்காக ஆபிஸ் ஆண் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியும், கீர்த்தி அவமானத்தில் ஆபிஸ் மாறிச் சென்றதும் ஷாலினியின் மூளை எடுத்துச் சொன்னது.

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.