UNLEASH THE UNTOLD

தேடி வந்த அங்கீகாரம்! எழுத்தாளர் சீதா ரவி

வாழ்க்கையை அதன் போக்கிலே ஏத்துக்கணும். அது வர்ற வழியில் எதிர்கொள்ளணும். வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அதீத மகிழ்ச்சி, அதீத துயரம் இரண்டுக்குமே அர்த்தமில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவை மாறிக்கிட்டே இருக்கும். பெண்கள் தங்களுடைய தேவைகளைப் போராடித்தான் பெற வேண்டும் என்கிற சூழல் வந்தால் போராடத் தயங்கக் கூடாது. போராடும் முறைகளை அவங்கவங்க வாழ்வியல் சூழலுக்குத் தகுந்த மாதிரி தனது ஆளுமை, மதிநுட்பத்தால் வடிவமைச்சுக்கணும்.

கட்டணமில்லா பேருந்து என் பார்வையில்...

பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன் என்று அம்பேத்கர் பேசினார். பெண்கள் சமூக, பொருளாதாரரீதியான மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குப் பொதுச்சமூகத்தின் சம்மதத்தைப் பெறா அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு திட்டமும் முழுமையடையாது. சட்டரீதியான அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரம் மிகவும் வலிமையானது.

உணர்வுகளின் எரிமலை - உச்சக்கட்டம் அடையாததால் ஏற்படும் பாதிப்புகள்

நிறைவான, முழுமையான உடலுறவு இல்லாத பட்சத்திலும், அல்லது பாலுறவே இல்லாமல் போகும்போதும் என்னென்ன உளவியல், உடலியல் பாதிப்புகள், உளவியல் சார்ந்த உடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பேசலாம்.

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

இலக்கணம் மாறுதே... 2

அதே ஆபிசில் தங்களுடன் ஒருத்தியாக வேலை பார்த்த கீர்த்தியும் அவளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட மோகனும், ஷாலினியின் ஞாபகத்துக்குள் வந்து போனார்கள். மோகன் ஆர்த்தியைப் போட்டுவிட்டதாகச் சொல்லி, அதற்காக ஆபிஸ் ஆண் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியும், கீர்த்தி அவமானத்தில் ஆபிஸ் மாறிச் சென்றதும் ஷாலினியின் மூளை எடுத்துச் சொன்னது.

தன் உரிமைகளுக்காகப் போராடும் வருண்!

‘சனிக்கிழமை நிலா நண்பர்களுடன் வெளியில் சென்றால் மதிய உணவுக்கு வந்துவிட வேண்டும். ஊர் சுற்றப் போனாலும் தான் போன் செய்தால் எடுத்துப் பேச வேண்டும், பல ஆண்டுகளாக அவன் போக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு இந்த ஆண்டாவது அவள் தன்னை அழைத்துப் போக வேண்டும். நிலாவின் பெற்றோர் இருக்கும்போது வேட்டிதான் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. இஷ்டப்படி ஷார்ட்ஸ் அணிய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற கடுமையான விதிகளை நிலாவிடம் தலையணை மந்திரம் போட்டுச் சம்மதிக்க வைப்பதுதான் வருணின் போர்த் தந்திரம்.

டோங்கிரியா வன தேவதைகள்!

டோங்ரியா பழங்குடி பெண்கள் வேதாந்தாவுக்கு எதிராக உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சாலைத் தடைகளை நடத்தினர். எக்காரணத்திற்கும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தங்கள் வனங்களைக் காக்க ஊக்கப்படுத்தியுள்ளது.

திராவிடமும் தமிழும்

தமிழ் தேசியம் என்பதென்ன? தமிழின் பெருமைகளை ஊக்கப்படுத்துவதோடு, தமிழனின் அறம்சார் வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதல்லவா தமிழ்த்தேசியம்?

டைனோசர் உலகம்

மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பதற்கு காரணம் இந்தச் சுற்றுச்சூழலும் அதற்கேற்ப தீர்மானிக்கப்பட்ட தாயனையும். இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் தாயனையும் தனித்துவமானது. அதுதான் தடயவியலின் (forensic) அடிப்படை. குற்றம் நடந்த ஓர் இடத்தில் கிடைக்கும் தலைமுடி, நகம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் தாயனையை வைத்து குற்றவாளியைக் கண்டறிவதுதான் தடயவியல். உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் தாயனை இருப்பதால் முடி, நகம், ரத்தம் முதலியவற்றில் இருந்து தாயனையைச் சேகரிக்க முடியும்.

எதிர்மறை உணர்வுகளுக்கான தீர்வுகளைக் காண்போம்

யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.