UNLEASH THE UNTOLD

உணர்வுசார் நுண்ணறிவு என்றால் என்ன?

நமது மொத்த நாளையும் உருப்படியாகக் கழிக்கப் போகிறோமா அல்லது வீண் மன வருத்தத்தில் கழிக்கப் போகிறோமா என்பது நமது ‘மூட்’ எனும் உணர்வு நிலையைப் பொறுத்துதான். அதையும் அந்த மூடைக் கெடுப்பது காலை உணவான உப்புமா, அலுவலகத்தில் பிழிந்தெடுக்கும் மேலாளர், சரியான சில்லறைத் தராத பேருந்து நடத்துநர், இன்னும் சுத்தம் செய்யப்படாத அலுவலக அறை, காலையில் நேரத்திற்கு எழாத பிள்ளைகள் என்று எளிதான காரணங்கள் போதும். இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கலாம், அது உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கலாம், இந்த அற்ப காரணங்களுக்காக அதைக் கெடுத்துக் கொள்ளலாமா?

சூழலியல் வானில் ஜொலிக்கும் விண்மீன்: ரேச்சல் கார்சன்

1962 ஆம் ஆண்டு, ரேச்சல் கார்சன் எழுதிய ’Silent Spring’ (மௌன வசந்ம்) என்கிற புத்தகம் உலகில் வெகுவேகமாகப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது அறிமுகமான பூச்சிக்கொல்லியான டிடிடி (TTT) என்கிற மருந்தை விவசாயத்தில் பயன்படுத்துவதால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவையும், மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமானது.

அற்புதமான இமயமலைப் பயணம்!

அடுத்த நாளும் பனியில் மலையேற்றம் செய்தோம். கால்களை எப்படிப் பனியில் வைக்க வேண்டும் என்று இந்த கேம்பில் இருந்து புறப்படும் பொழுதே கூறிவிட்டார்கள். நடக்கும்போது, ஒன்று முன் பாதத்தை உறுதியாக அழுத்தி வைக்க வேண்டும் அல்லது குதிகாலை அழுத்தி வைத்து நடக்க வேண்டும். பனி, பார்ப்பதைப் போல் இனிமையாக இருக்காது. சிறிது சறுக்கினாலும் விழுந்து விடுவோம். விழுவதில் ஒன்றும் இல்லை. திரும்பியும் எழுவதில்தான் இருக்கிறது. வழிகாட்டி ‘கரம்’ திடீரென்று எங்கிருந்து வருகிறார் என்பதே தெரியாமல் மின்னல் போல வந்து உதவி செய்வார்.

சோலையம்மாள்

ஒருநாள் அவன் எண்ணிலிருந்து இவளுக்கு வாட்சப்பில் செய்தி வர ஆர்வமாய் திறந்து பார்த்தவளின் உடல்  குலுங்கியது. அன்றொருநாள் அம்மாவின் போனில் பார்த்ததுபோலவே ஆபாசமான படங்கள். ஆனால் அன்றைய அருவருப்பு இப்போது இல்லை. வாய் தன்னிச்சையாக “ச்சீய்…” என்றாலும், அந்த வயதிற்கேயுரிய ஆர்வத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தாள். இதழ்களில் அவளையுமறியாமல் புன்னகை வழிந்தது. ஒரு ஹார்ட்டின் மட்டும் அனுப்பினாள். 

ஊரான ஊரில் பேரான பேர்கள்

ஆஷா பரி என்றொரு சாச்சி இருக்கிறார் ஊரில். ஆங்கில காட்பரி, பிளாக்பரி, ப்ளூபரி போல ஏரலில் எப்படி ஆஷாபரி என்று நினைக்க வேண்டாம். ஆயிஷா ஃபரீதாவைத்தான் ஆங்கிலேயராக்கி விட்டார்கள் ஏரலூரார்கள்.

கொட்டிய மழை...

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

திருச்செந்தூர் முருகனுக்கு உதயமார்த்தாண்டமும், உதயமுறைக் காரிகளும்

நம்பூதிரி பிரமணர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயில்களில், நடைபெற்ற முறைகேடுகளையும், தேவதாசிப் பெண்களின் இழிநடத்தையையும், பூசாரி ஒருவனால் பெண்ணொருத்தி சீரழிக்கப்பட்ட சம்பவத்தையும் விளக்கிக் கூறி, ஆனதினால், காவடி, கைக்கூலி, காணிக்கை, தேவதாசி ஆட்டம் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று கூறும் அகிலத்திரட்டும், அகிலத்திரட்டை அஸ்திவாரமாகக் கொண்ட அய்யாவழியும், இந்துத்துவத்தின் சித்தாந்தத்தோடு எப்படி பொருந்திப் போகும்?

மற்றவர் நிலையில் இருந்து பார்த்தீர்களா?

நாமும் அப்படியே ஒன்று யாரையும் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவோம், பொறாமைப்படுவோம், அவரோடு விரோதம் பாராட்டுவோம், இல்லாவிடில் அவருக்கு ஏதோ பிரச்னை நாம் உதவி புரிவோம் என்றெண்ணி அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதவி என்கிற பெயரில் ஓர் ஏழரையைக் கூட்டி, பின்னர் நான் நல்லதுதானே நினைத்தேன் என்று மருகுவோம். ஒன்று அடுத்தவருக்கு வேதனை, அடுத்தது அவரோடு நமக்கும் வேதனை.

தேவதைக் கதைகளின் தாய் - மேடம் ஆல்னாய்

‘Blue Bird’ என்ற இவரது புத்தகத்தை பெண் விடுதலை வரலாற்றின் மிக முக்கிய ஆவணமாகக் கவனிக்கவேண்டும் என்கிறார்கள். கடந்த 2021ஆம் ஆண்டு இவரது கதைகள் மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

பார்ப்பன ஆண்கள் ஏன் சமைக்கிறார்கள்?

பரப்பான ஆண்களில் பெரும்பாலானோர் அடிப்படை சமையல் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள்! குறைந்த பட்சம் காஃபி, தேநீர் தயாரிப்பது. சாதம் வடித்து, குழம்பு, ரசம் ஒரு பொரியலாவது செய்ய கற்றிருப்பார்கள்.