UNLEASH THE UNTOLD

பெரிமெனோபாஸ்

சிலருக்கோ ஒரு மாதம் ஏற்படும். சில மாதங்கள் வராது. அல்லது இஷ்டப்படி மாதவிடாய் இருக்கும். அதாவது மாதவிடாய், வாரம் அல்லது மாதம், இல்லாமல் போவது என எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
அதே நேரம் இப்படிதான் நடக்கும் என்பதில்லை. இயற்கை ஒவ்வொரு பெண்ணையும் தனித்தன்மையுடன் படைத்துள்ளது. எனவே, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்குப் பல வருடங்கள் பெரிமெனோபாஸ் மாற்றங்கள் நடக்கும்.

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்... டும்... டும்…

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம்.

வாழ்வது ஒருமுறை...

எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

சாதி தெரியாமல் வளர்வானா என் பிள்ளை?

சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!

பெற்றோருக்குப் பொறுப்பில்லையா ?

தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பள்ளிக்கு வந்து குழந்தைகளின் ஆசிரியர்களுடன் உரையாடி, தங்கள் குழந்தைகளின் நல்லது கெட்டது அறிந்து கண்டிக்கவோ பாராட்டவோ செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், மாணவர்களைச் சமூகம் வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதைத் தடுக்க முடியும்.

‘அழகை ஆராதித்துதான் ஆகவேண்டுமா ?’

ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.

பிள்ளைகளுக்கான பரிசு!

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

புத்தம் சரணம் கச்சாமி

தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையைத் தவறான விதத்தில் முன்னெடுக்கும்போது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது.

மூளையில் ஆரம்பிக்கும் மெனோபாஸ்

கருமுட்டை தூண்டும் இயக்குநீர் கரு முட்டை வளர்ச்சியைக் குறைக்கும். இதற்கெல்லாம் முன்பே மெனோபாஸ் ஓர் இடத்தில் ஆரம்பிக்கும். நாம் கர்ப்பப்பை, ஓவரியில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மெனோபாஸ் என நினைக்கிறோம் இல்லையா, உண்மையில் மெனோபாஸ் மூளையில்தான் ஆரம்பிக்கிறது.

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு.