UNLEASH THE UNTOLD

Month: April 2024

மநு சொல்லும் வைதவ்யம்

பெண்களுக்குத் திருமணமே, உபநயனக் கிரியை என்று சொல்லப்படுகிறது. பதிக்குச் செய்யும் பணிவிடையே குருகுலவாசம், வீட்டுவேலைகளைச் செய்வதே அக்னிஹோத்ரமாகும் என்கிறது மநு தர்மம்.

போர்களுக்குப் பின்னால்... ஸ்திரீ பர்வம் நாடகம்

சர்வாதிகாரம் , பாசிசம், ஆணவம், வளங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்காக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் போர்கள் எந்தப் பாவமும் அறியாத சாமானியர்களின் உயிர்களைப் பறிக்கின்றன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு பிணங்களை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள் சர்வாதிகாரிகள் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறுகிறது.

ஆயிஷா

“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.

பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல்

‘சேயினுட ஆட்டு கேட்டு இருப்பது அல்லால்

பேயினுட ஆட்டோர் பூதர் அறியாது இருந்தார்’8 என்ற வரிகளில் மக்கள் பேயாட்டம் பற்றி அறியாமல் வாழ்ந்தனர் என்று பெருமையாக உரைக்கிறது அகிலத்திரட்டு.

டெம்ப்ளேட்களும் தாலி சென்டிமெண்ட்களும்

ஒருவேளை தாலி கட்டி, காப்பாற்றும் அந்த உத்தமவான் ஆபத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டுமென்றால் என்ன செய்வான்? அதுவே வயதான பெண்மணியைக் காப்பாற்றவோ அல்லது தங்கை முறையில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றவோ நேர்ந்தால் என்ன செய்வார்கள்? அது ஏன் நாயகியைக் காப்பாற்ற மட்டும் அவர்களுக்குத் தாலிதான் கிடைக்கிறதா?

பேச்சியம்மாள்

“அவங்கப்பன் சம்பாதிக்கிற காசு டாஸ்மாக் போனது போக ‘ஒலக்கஞ்சி’ க்குக் கூட காணாது. அப்படி இப்படி நாலு காசு பார்த்தாத்தான பொட்டப்புள்ளைக்கு சேர்த்து வைக்க முடியும்?” என்று தனது அடாவடித் தனத்துக்கு, அவளுக்கு அவளே  நியாயம் சொல்லிக்கொள்வாள். அதனால் எந்த பழி பாவத்துக்கும் அஞ்சுவதில்லை.

ஓர் இரவு

ஓர் இரவு 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி அவர்களுக்காக அண்ணா அவர்கள் எழுதிய நாடகம்.

நோக்கம் கண்டுகொண்டால் வாழ்வே பரிசாகும்!

ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும், இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம், ஏன் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுடன் எழுபவருக்கு, எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவும் இருக்கும்.

வீணாப் போனவ

“பாவம்! அவ சின்ன வயசுலயே வீணாப்போயிட்டா!”

“அச்சச்சோ, அந்த மாமி வீணாப்போனவா, அவாளுக்கு போய் குங்குமம் கொடுக்கப் போறியே!”

“அவளப் பாரு, வீணாப்போனவ மாதிரியா இருக்கா?”