UNLEASH THE UNTOLD

Tag: Tamil

ஈவ்லின்

“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?

இசக்கிமுத்து

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

9. குடும்ப நாவலாசிரியர்கள் Vs இலக்கியவாதிகள்  

வீட்டுப் பெண்களின் நேரம் என்பது அவர்களுக்கானது இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டும்.  இதற்கிடையில் டீ இடைவேளை, ஒவ்வொரு வேளை சமையலுக்கான பாத்திரங்களைக் கழுவி வைப்பது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, துணிகளைக் காய வைத்து மடித்து வைப்பது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஏதாவதொரு வேலை வந்து கொண்டே இருக்கும். 

போர்களுக்குப் பின்னால்... ஸ்திரீ பர்வம் நாடகம்

சர்வாதிகாரம் , பாசிசம், ஆணவம், வளங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்காக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் போர்கள் எந்தப் பாவமும் அறியாத சாமானியர்களின் உயிர்களைப் பறிக்கின்றன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு பிணங்களை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள் சர்வாதிகாரிகள் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறுகிறது.

டெம்ப்ளேட்களும் தாலி சென்டிமெண்ட்களும்

ஒருவேளை தாலி கட்டி, காப்பாற்றும் அந்த உத்தமவான் ஆபத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டுமென்றால் என்ன செய்வான்? அதுவே வயதான பெண்மணியைக் காப்பாற்றவோ அல்லது தங்கை முறையில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றவோ நேர்ந்தால் என்ன செய்வார்கள்? அது ஏன் நாயகியைக் காப்பாற்ற மட்டும் அவர்களுக்குத் தாலிதான் கிடைக்கிறதா?

7. எழுத்தை ஆயுதமாக்கிய பெண்கள்

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

6. ஆன்ட்டி ஹீரோ அலப்பறைகள்

ஆன்ட்டி ஹீரோக்களின் அக்மார்க் பணக்காரத் திமிர் பிடித்த நாயகன் சுதாகர். கம்பீரமான, கவர்ச்சிகரமான தோற்றம் உடையவன். அவனைத் தற்செயலாகச் சினிமா அரங்கத்தில் பார்க்கிறாள் மாயா. பொதுவெளியில் அநாகரிகமாக ஒரு பெண்ணை அவன் அணைத்தபடி நின்றிருந்த விதம் மாயாவை எரிச்சல்படுத்துகிறது. ஆரம்பப் பார்வையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகிறது.

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’