UNLEASH THE UNTOLD

Tag: Tamil

சாமியாடி என்ன சொன்னார்?

காலையில் அவளைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போன அதே சாரதா அக்கா இவர் இல்லை என்று நினைத்த போதே அவள் கண்கள் சொருகின. மயங்கி விழப் போகிறாரோ என்று நினைத்ததற்கு மாறாக மெல்ல அவள் காதோரமாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கிசுகிசுப்பான ஆனால் தீர்க்கமான குரலில் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவள் சர்வமும் ஒரு நொடியில் உறைந்தது.

கோயில் கொடை

அவள் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கியிலிருந்து, ‘பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடனே கோயிலுக்கு முன்பாக வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேளதாளக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் உடனே விநாயகர் கோயில் முன்பாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பு தொடர்ந்தது.

எழுத்து வியாபாரம்

Kdp அதாவது kindle selectஇல் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களுக்கு Kindle Edition Normalaized pages (Kenp read counts) அடிப்படையில்தான் ராயல்டி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வாசிக்கப்படும் பக்கங்களைப் பொறுத்தது.  ஆனால், இந்த எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டால் சிக்கல்தான். அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை அப்படியே அறுபதாயிரம் வரை சரித்து நமக்கான ராயல்ட்டியை ஆறாயிரத்திற்கும் கீழ் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

மழையும் ரயிலும்

அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் எச்சரிக்கை விளக்கைப் பொருத்தியவாறு ஓடிவந்த சுகுமார் கையிலிருந்த சிவப்பு வெளிச்சமும், சிவாவின் முகத்தில் இருந்த பதற்றமும் தான் கணித்தது சரி என்று தோன்றியது.

நூதன அறிவுத் திருடர்கள் ஜாக்கிரதை!

ஒரு நாவலில் உள்ள காட்சிகளை அல்லது கதைக்கருவை  அப்படியே எடுத்துத் தங்கள் கதைகளில் பயன்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்பிரேஷன் அல்லது இன்ப்ஃளுயன்ஸ் என்று இங்குள்ள சிலர் சமாளிக்க வேறு செய்கிறார்கள். நிறையப் பேருக்கு இன்ஸ்பிரேஷன், இன்ப்ஃளுயன்ஸ், காப்பி இது மூன்றுக்குமே வித்தியாசம் தெரிவதில்லை. 

கொட்டிய மழை...

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

10. குடும்ப நாவல் போட்டிகள்

இங்கே இணைய வாசிப்பைப் பெண்களிடையே பிரபலமாக்கியது ஒரே ஒரு வார்த்தைதான். அதுதான் இலவசம்! ஏனெனில் இன்றும் பெண்கள் புத்தகங்களுக்காகச் செலவழிப்பதை எல்லாம் குடும்பங்கள் விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை.

ஈவ்லின்

“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?

இசக்கிமுத்து

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

9. குடும்ப நாவலாசிரியர்கள் Vs இலக்கியவாதிகள்  

வீட்டுப் பெண்களின் நேரம் என்பது அவர்களுக்கானது இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டும்.  இதற்கிடையில் டீ இடைவேளை, ஒவ்வொரு வேளை சமையலுக்கான பாத்திரங்களைக் கழுவி வைப்பது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, துணிகளைக் காய வைத்து மடித்து வைப்பது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஏதாவதொரு வேலை வந்து கொண்டே இருக்கும்.