UNLEASH THE UNTOLD

Tag: social media

பொறுப்பாக எப்போது நடந்துகொள்ளப் போகிறோம்?

ஒருவரை விமர்சிக்க, தூற்ற தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியை அளவீடாகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெளிப்படுவது நான் அப்படியானவர் இல்லை, ரொம்ப பர்பெக்ட் என்பதைத்தான் வெவ்வேறு வகையில் கூற முயல்கின்றனர்.

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

இன்பாக்ஸ் இம்சைகள்

தொல்லை கொடுக்கும் நபரைத் தவிர்க்க மிக எளிமையான தீர்வு என்றால் ப்ளாக் செய்வதுதான். ஹாய் அனுப்பியது யார் என்று அவர் பக்கத்துக்குச் சென்று ஆய்வெல்லாம் நடத்தத் தேவையில்லை. யோசிக்கத் தேவையில்லை. முன்பின் அறியாத நபரிடம் தனிப்பட்ட உரையாடலை ஆரம்பிக்க நேராக விஷயத்துக்கு வரவேண்டும். வெறுமனே ஹாய் என்பதற்கு நான் வெட்டியாக இருக்கிறேன், நீயும் வெட்டியாக இருக்கிறாயா என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்? இத்தகைய நபர்களைக் கையாள்வது நேரக்கேடு. ஒற்றைச் சொடுக்கில் நட்பு நீக்கம் செய்வதாலோ ப்ளாக் செய்வதாலோ இழக்கப் போவது ஒன்றுமில்லை.