UNLEASH THE UNTOLD

Tag: Series

சலனம்

அறைக்குள் வந்தேன். அனைவரும் உறங்கி இருந்தனர். உடைமாற்றி உறங்கத் தயாரானேன். கண்களை மூடினால் இன்று காலை முதல் நடந்தவை கண்முன் அரங்கேறின. முதலில் என்னைப் பற்றி அஃதர் அளித்த கருத்து. நான் என்னை அழைப்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாம் வந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சொல்லமுடியும் என்று சற்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

சென்னைக்குச் சென்றாள் மதி...

அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.

அவள்... அவன்... அவர்கள்...

உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.

அவள் அவன் அவர்கள்

“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?