UNLEASH THE UNTOLD

Tag: Series

மீண்டும் ஒருமுறை...

இந்த மனிதன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார் போலிருக்கிறது. உள்ளே விடுப்பை ரத்து செய்யச் சொல்லியவுடன் மனம் கதறியது. திங்கள், செவ்வாய் விடுப்பு எடுக்கலாமென்றால் கூடாது. அடுத்த சனிக்கிழமைதான் விடுப்பு. சென்ற முறை போலல்லாது இம்முறை மிகுந்த ஏமாற்றம். சென்ற வருடம் பிரிவுத் துயர். இவ்வருடம் பிரிவு அறுவடைநாள். அதை விட்டுக் கொடுக்க என்னால் சற்றும் இயலவில்லை. சரியான காரணம் என்று மூவருக்கு விடுமுறை உறுதியாயிற்று, எனக்கு முடிந்தவரை வேண்டும் என்று கேட்டாயிற்று. ‘சாரி மதி’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு, கலங்கியபடி பார்க்கையில், ‘நீ செல்லலாம்’ என்று அஃதரின் வாய் சொன்னது. உண்மையில் இம்முறை என்னால் இயலவில்லை, மீண்டும் ஒருமுறை தனியே சென்று கேட்டேன்.

சிநேகம்

சங்கருடன் ஏன் செல்லவில்லை என்று கேட்டதும் தானே பொங்கிவிட்டாள். சரிதான் ஆனால், அந்தக் குரல் அதிலிருந்த கோபம், அதிலிருந்த வாதம், அதன் தீர்க்கம் உண்மையில் என்னை ஒன்றும் பேச இயலாததாக்கிவிட்டது. அது ஒரு வெட்டிப் பேச்சோ இல்லை மேடைப்பேச்சோ நிச்சயமாக இல்லை. அது ஒரு பெண்ணின் உரிமையும் உணர்வும் கலந்த நிதர்சனம்.

சலனம்

அறைக்குள் வந்தேன். அனைவரும் உறங்கி இருந்தனர். உடைமாற்றி உறங்கத் தயாரானேன். கண்களை மூடினால் இன்று காலை முதல் நடந்தவை கண்முன் அரங்கேறின. முதலில் என்னைப் பற்றி அஃதர் அளித்த கருத்து. நான் என்னை அழைப்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாம் வந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சொல்லமுடியும் என்று சற்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

சென்னைக்குச் சென்றாள் மதி...

அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.

அவள்... அவன்... அவர்கள்...

உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.

அவள் அவன் அவர்கள்

“ஐயோ, மாட்டேன் மாட்டேன். மூனு வேளையும் போன் பண்றேன். அம்மாட்ட தினமும் எலுமிச்சை சாதமே உனக்குக் கட்டித் தரச் சொல்றேன். சரியா? தயவுசெஞ்சு என்னைக் கிளம்ப விடுடி, நேரமாச்சு. வேலைய விட்டுட்டுப் போறேன்னு நான் நேரத்துக்கு வர்றதில்லைன்னு எல்லாரும் பேசுவாங்க” என்றாள் மாது. இதற்கு மேல் என் அழுகையைக் கேட்கவா வேண்டும்?