UNLEASH THE UNTOLD

Tag: Series

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

மறுக்கப்பட்ட அன்பும் தரப்படாத அங்கீகாரமும் - இலக்கணம் மாறுதே... 14

“ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா, அதுக்கு முன்னாடி அது பசு மாடு தானானு செக் பண்ணிக்கணும். ஏன்னா, காளை மாடுகிட்ட போயி பால் கறக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்தானே?

யாரையும் திருத்துவது உன் வேலை அல்ல – இலக்கணம் மாறுதே -13

“நீ இருக்குறது ஒரு டென்னிஸ் மைதானம் என வைத்துக்கொள்வோம். நீ களத்தில் நிற்கிறாய். ஆட்டம் தொடங்கிவிட்டது. எதிரில் நிற்பவர் பந்தை உன் மேல் படும்படி அடிக்கிறார். உன் கையில் பந்தை அடிக்கும் மட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இல்லை எனக்கு டென்னிஸ் ஆடவே வராது. பல்லாங்குழிதான் ஆடவரும் என்று சொல்வதால் உனக்கு என்ன பலன்?”

நீயும் பெண்ணியவாதியா? - இலக்கணம் மாறுதே... 12

சிலர் பெண்ணியம் பேசுபவர்களை, ஏதோ தங்களுக்குத் தீங்கிழைப்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் சம உரிமையுடன் நடத்தப்படும்போது அங்கு சுரண்டல்கள் இல்லை.
ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வைத்துக்கொள்வோம். அந்தப் பெற்றோர், ஆண் குழந்தைக்கு அதிக கவனிப்பு கொடுத்து, சகோதரியை நீதான் கவனிக்க வேண்டும். நீதான் சம்பாதித்து, செலவு செய்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஆண் குழந்தையும் பொறுப்பு அனைத்தையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டு, தனக்கான வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அடுத்தவரை சுதந்தரமாக வாழவிடுவதும் இல்லை. ஆனால், பெண்ணியம் என்பது அவரவர் ஆட்டத்தை ஆடுவது . அவரவர் பொறுப்பை எடுத்துக்கொள்வது.

இலக்கணம் மாறுதே... 11

“எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கும், இந்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது, உனக்கு வழிகாட்ட முடியுமே தவிர உனக்காக ஓடுவது இயலாத காரியம். நீதான் ஓட வேண்டும். எனவே நீதான் முயற்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்தப் புத்தகங்களை வாசி. மேலும், ஜாதி எந்த அளவிற்கு மனிதகுல மாண்பைச் சீரழிக்கிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், மத ஒற்றுமை, அரசியல் குறித்த, நமது உரிமை குறித்த புரிதல்களை ஏற்படுத்தி தருபவர்கள் என இணையத்தில் விழிப்புணர்வையும், தர்க்க சிந்தனைகளையும் நிறைய பேர் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே தெரிந்து கொள்வது எளிதுதான். ஹெர் ஸ்டோரிஸ் இணைய தளத்தின் கட்டுரைகளையும் வாசிக்க தவறாதே.”

இலக்கணம் மாறுதே... 10

“எல்லார் பிறப்புக்கும் ஆதாரமாக இருக்கிற ஒரு விஷயத்தை, எப்படிக் கேவலமாகப் பேசுவதற்கு மனசு வருதுனு தெரியல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்றை, தன் வாழ்வுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை, ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டும்? இழிவாக இளக்காரமாக நினைக்க வேண்டும்? காரணம் என்னவாக இருக்க முடியும் நித்யா?”

இலக்கணம் மாறுதே... 9

“வீட்டில இருந்த அருண், அவனோட காலேஜ் டேஸ் கேர்ள் பிரெண்டோட பேச ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் அனுப்பியிருந்த மெசேஜை வாசிச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அருண் கிட்ட சண்டை போட்டு அழுது புரண்டேன். வீட்ட எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்குத் தாங்க முடியாத வலியா இருந்திச்சி. அந்தப் பொண்ணு கிட்ட பேசவே கூடாதுனு சத்தியம் வாங்குனேன்.

<strong>உரையாடல்</strong>

“இது போல் நீ ஒரு வாரம் இருப்பதன் காரணம் என்ன? உனக்குத் தெரியாது மதி. இந்த ப்ராஜெக்டிற்காக எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்று. நான் ஒவ்வொன்றாக அலசி உன்னையும் தீக்சித்தையும் தேர்வு செய்தேன். உங்கள் இருவரையும் வேண்டாம் என்று கூறியவர்களிடம் உங்களைத் தகுதியானவர்கள் இதற்கு என்று எத்தனை முயன்று நிறுவினேன் தெரியுமா? இது புரியாமல் உனது விடுப்பிற்காக நீ இத்தனை வருந்துகையில் எனக்கு எதுவுமே புரியவில்லை மதி.”

மீண்டும் ஒருமுறை...

இந்த மனிதன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார் போலிருக்கிறது. உள்ளே விடுப்பை ரத்து செய்யச் சொல்லியவுடன் மனம் கதறியது. திங்கள், செவ்வாய் விடுப்பு எடுக்கலாமென்றால் கூடாது. அடுத்த சனிக்கிழமைதான் விடுப்பு. சென்ற முறை போலல்லாது இம்முறை மிகுந்த ஏமாற்றம். சென்ற வருடம் பிரிவுத் துயர். இவ்வருடம் பிரிவு அறுவடைநாள். அதை விட்டுக் கொடுக்க என்னால் சற்றும் இயலவில்லை. சரியான காரணம் என்று மூவருக்கு விடுமுறை உறுதியாயிற்று, எனக்கு முடிந்தவரை வேண்டும் என்று கேட்டாயிற்று. ‘சாரி மதி’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு, கலங்கியபடி பார்க்கையில், ‘நீ செல்லலாம்’ என்று அஃதரின் வாய் சொன்னது. உண்மையில் இம்முறை என்னால் இயலவில்லை, மீண்டும் ஒருமுறை தனியே சென்று கேட்டேன்.

சிநேகம்

சங்கருடன் ஏன் செல்லவில்லை என்று கேட்டதும் தானே பொங்கிவிட்டாள். சரிதான் ஆனால், அந்தக் குரல் அதிலிருந்த கோபம், அதிலிருந்த வாதம், அதன் தீர்க்கம் உண்மையில் என்னை ஒன்றும் பேச இயலாததாக்கிவிட்டது. அது ஒரு வெட்டிப் பேச்சோ இல்லை மேடைப்பேச்சோ நிச்சயமாக இல்லை. அது ஒரு பெண்ணின் உரிமையும் உணர்வும் கலந்த நிதர்சனம்.