UNLEASH THE UNTOLD

Tag: Pennool

வெற்றி கொள்ள முழு வாழ்க்கையே இருக்கிறது!

‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.

கலகப் புத்தகம்

மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் என்றால் பிடிக்காது. அவர்களது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று கூறுகிறார். இன்று பல குழந்தைகள் யூடியூப் வீடியோக்கள் பார்த்தே பொழுதைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வைக் கொண்டாடலாம் என்று பெற்றோர் மனதில் விதைக்கிறார்.

வாழ வழி காட்டும் புத்தகம்

‘நம் கடமை வாழும் வரை வாழ்ந்து தீர்ப்பதே, சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் சேர்த்து தொலைவதே’ என்று இவர் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் உச்சகட்ட சோகத்தையும் தகர்க்கக் கூடியதாகவே உணர முடிந்தது.

நளினி ஜமீலா

கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததுடன் நிறுத்திவிடாமல் ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.