UNLEASH THE UNTOLD

Tag: Natchathira

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?

ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.

பறிபோகும் ஏழைகளின் உயிர்கள்

“பக்கத்து கம்பெனில பட்டாசு வெடிச்சிடுச்சு” என்று ஒருவர் கத்திக் கொண்டே வந்தார். வெடித்துச் சிதறிய உடலின் ஒரு பகுதிதான் தங்கள் முன் விழுந்தது என்று தெரிந்துகொண்டனர்.

பாதுகாப்பு?

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

மலரும் யாசினியும்

தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.

திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.

தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.

தனி ஆண்மகன், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகே தத்தெடுக்க முடியும்.

சுதந்திரம் என்பது இதுதானா?

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கவே கூடாதா? அவளுக்கென்று நட்பு வட்டம் இருக்கக் கூடாதா? அவளின் அலைபேசியைக்கூட ஆராய்ச்சி செய்யும் ஆண்கள் இருக்கத்தானே செய்கின்றனர். “ஏன், பொண்டாட்டி மொபைல் புருஷன் பார்க்கக் கூடாதா?” என்று ஆதங்கம் வேறு வந்து தொற்றிக் கொள்கிறது ஆண்களுக்கு. மனைவியின் அலைபேசியில் அவளைச் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவள் தோழியரின் அல்லது பணியிடத்தின் ரகசியங்களும் ஒளிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்வதில்லை.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?