UNLEASH THE UNTOLD

Tag: marriage

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

     விவாதமாகும் விவாகங்கள்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

சபிண்ட உறவுகள் பாவமா?

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இலக்கணம் மாறுதே... 8

“நான் அருணைக் காதலித்தேன். அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அருணைக் காதலித்தாய் சரி, ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?” என மீண்டும் கேட்டாள் நித்யா.

“காதலிச்சா கல்யாணம்தான் பண்ணுவாங்க. வேறு என்ன பண்ணுவாங்க?” என்று பதில் சொன்னாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி… நன்றாக யோசித்து பதில் சொல். காதலிச்சா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன? கல்யாணம் எதுக்காகப் பண்ணின?”

“சமூகத்துல ஒரு அங்கீகாரத்தோட வாழத்தான்…”

காத்திருத்தல் நல்லதே!

அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.

திருமணங்களும் விவாகரத்துகளும்

காதலித்தால் பிரியக் கூடாது. திருமணம் செய்தால் விவாகரத்து வாங்கக் கூடாது. காதலிக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டாயம் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக விதியை ஆண் மேலாதிக்கச் சமூகம் கட்டமைக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் ஆண் மீறும்போது கண்டுகொள்ளாத சமூகம், பெண் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்று பொங்கி எழுகிறது.

<strong>திருமணமும் தாய்மையும்</strong>

ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.

எதுவும் முழுமையானதில்லை; எதுவும் முடிவதுமில்லை!

அள்ள அள்ளக் குறையாத தெவிட்டாத காதலும் நம்பிக்கையும் ஒரே கணத்தில் உருவாகி முடிவடைகின்ற ஒன்றில்லை. இது நீட்சியானது. முடிவற்ற பயணம். ஒரு பயணத்திற்கு எடுத்துப் போகும் வாகனத்தை முன்னாயத்தம் செய்வதைப் போல அது இடையறாது ஓடிக்கொண்டேயிருக்க எரிபொருள் நிரப்பியும் இயந்திரங்களைச் சரிபார்த்தும் கவனித்துக்கொள்வதைப் போல, அதன் சாரதி நாம் அங்கங்கு நிறுத்தித் தேநீர் அருந்தி, உணவுண்டு, ஓய்வு கண்டு நம்மைக் ஆற்றிக்கொள்வதைப் போல உறவுகளில் காதலும் நம்பிக்கையும் அள்ளக் அள்ளக் குறையாதிருக்கவும் தெவிட்டாதிருக்கவும் உழைத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

டிராபி வொய்ஃப்

ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.

பெண்களே ஆண்களைத் தேர்ந்தெடுக்கட்டும்!

சுய சார்பும் சுயமரியாதையும் கொண்ட ஒரு பக்குவமடைந்த பெண்ணால் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஆண், பெண்களை மதிப்பவனாகவும் தன் சக உயிராக நினைப்பவனாகவும் காதலிக்கத் தெரிந்தவனாகவும், நல்ல தோழனாகவும், அந்தப் பெண்ணிற்குப் பொருத்தமானவனாகவும் வாழ்க்கைத் திறன்கள் கற்றவனாகவும் பிரியும் நிலை ஏற்படும்போது, கண்ணியத்துடன் விடைபெற்றுச் செல்பவனாகவும் இருப்பான்.