சாதி தெரியாமல் வளர்வானா என் பிள்ளை?
சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!