UNLEASH THE UNTOLD

Tag: J Deepa lakshmi

அரக்கீஸ் பார் (ஏசி)

“ம்ம் ஆமாம், வீட்டுக்கு வரப்போறவன் கிட்ட கை நீட்டிக் காசு வாங்குறது அசிங்கம்னு போட்டுருக்குற பாண்ட் ஷர்ட்டோட வந்தால் போதும்னு சொன்னோம். அவன் என்னடான்னா என்னையும் என்னைப் பெத்தவங்களையுமே பிரிக்கப் பாக்குறான்!”

Yashoda weds Rithik

“அவனுக்கு அல்சர் இருந்ததே தெரியாது. எதையுமே சொல்ல மாட்டான். ஒரு தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லை. எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான். சமையலுக்கு, தோட்ட வேலைக்கு எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் அவனே இழுத்துப் போட்டு எல்லா வேலையும் செய்வான். குறிப்பா என்னை அப்படிப் பார்த்துப்பான். அவன் இல்லாம எப்படி இருக்கப் போறேன்னே தெரியல…”

தனிக்குடித்தனம்

நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.

அச்சச்சோ, உடம்பு சரியில்லையா வருண்?

நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.

பொம்பளைங்க அப்படித்தான் இருப்போம்!

“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.

அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

இந்தக் காலத்து ஆண்களே இப்படித்தான். திருமணத்துக்கு முன்பு நல்ல மனைவி வேண்டும் என்று விரதமிருக்கிறீர்கள், கோயிலுக்கு நடையாக நடக்கிறீர்கள், மாமனார் மெச்சும் மருமகனாக இருக்க வேண்டுமென்று வீட்டு வேலைகள் செய்து பழகுகிறீர்கள். திருமணம் என்று ஒன்று நடந்து மனைவியும் கொஞ்சம் நல்லவளாக அமைந்து விட்டால் போதும். அவரது அன்பிலும் செல்லத்திலும் அப்படியே மயங்கிச் சோம்பேறியாகி விடுகிறீர்கள்.

கார்டுக்கு கார்டியன்

“ஜட்டி எல்லாம் பழசாயிடுச்சு நிலா. புதுசு வாங்கணும்.”

“ம்ம்… அப்டியா? சரி உன் சைஸ் எனக்குத் தெரியும், நானே வாங்கிட்டு வரேன்.”

“இல்ல நிலா, நானே பார்த்துப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கிறேனே… என் ஏடிஎம் கார்டைக் குடேன்” என்று லேசாகப் பொறுமையிழந்தான் வருண்.

“ஓ… அந்தளவுக்கு வந்துட்டியா? உனக்கு விவரம் பத்தாது. கன்னாபின்னான்னு செலவு பண்ணாதேன்னு சொல்லி நீயும் சரின்னு ஒத்துகிட்டப்புறம்தானே கார்டை நான் வாங்கி வெச்சிருக்கேன்.”

“நான் உன் கார்டைக் கேட்கல நிலா. என்னோடதைத்தான் கேட்கறேன்.”

“உன் பணத்தை நான் பதுக்கி வெச்சிருக்கேன்னு சொல்றியா?”

“ஐயோ… அப்டி இல்ல, உன் கிட்ட ஒவ்வொண்ணுக்கும் கேட்டுக்கிட்டு இருந்தா உனக்கும் தொந்தரவா இருக்குல்ல…”

“ஆஹா, என்ன இவ்ளோ சாமர்த்தியமா பேசுற? உங்க அப்பா சொல்லிக் குடுத்தாரா?” நிலாவின் குரல் அபாயகரமாக உயர்ந்தது.

டீக்கடை அரட்டையும் டிவி அரட்டையும்

“அதை ஏன் கேட்குறீங்க? டீமில் புதுசா ஒரு பையனை வேலைக்கு எடுத்தேன். அதுலேருந்து பெரிய தொல்லை. வீட்ல மாமியாருக்கு உடம்பு சரியில்ல, புள்ளை ஸ்கூலுக்குப் போகணும்னு அடிக்கடி லீவு, லேட்டு. இதுல அவ சிரிக்கிறா, கேலி பண்றான்னு யார் மேலயாச்சும் புகார் வேற. இன்னிக்கு என்னடான்னா சாப்டாம வேலைக்கு வந்துருப்பான் போல, மயங்கியே விழுந்துட்டான். ஆனா ஒண்ணு, வேலைல அக்கறை இருக்கோ இல்லியோ, சும்மா பொழுதைப் போக்கணும்னு வந்துடுறாங்க. சே இனிமே டீம்ல பையனுங்களையே வேலைக்கு எடுக்கக் கூடாது!”

இனிமே நான் உனக்கு வேண்டாமா, நிலா?

வருண் மௌனமாக அவள் விட்டெறிந்த பிரஷ்ஷை எடுத்து அதிலிருந்த முடிக்கற்றைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இல்ல, வர வர என்னை நீ ரொம்ப இக்னோர் பண்ற மாதிரி இருக்கு.”

“ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டார்ச்சர் பண்ணாதே” என்று அவசரமாகக் கிளம்பத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டிருந்த முகத்தில் லேசான எரிச்சல்.

வருணுக்கு அழுகை வந்தது. தன் உணர்வுகளை மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. இவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் அலட்சியப்படுத்துகிறாளே.