UNLEASH THE UNTOLD

Tag: dress

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா… அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

உடையில் பாலின சமத்துவம்

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையாரின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

நானும் என் மனைவியும் அழகுக் கறுப்பு. இவன் மட்டும் எப்படியோ இப்படி வெள்ளையாகப் பிறந்து தொலைத்துவிட்டான். சிறு வயது முதலே பார்க்காத வைத்தியம் இல்லை. மிளகு, கடுகு, கருஞ்சீரகம் அரைத்துப் பூசிக் குளிக்க வைத்திருக்கிறேன். நண்பகல் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் உடல் விரைவில் கருக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி அதையும் செய்து வருகிறான். இருந்தும் மேனி பூஞ்சைக்காளான் பூத்தது போல் வெள்ளை நிறமாகவே உள்ளது.

கவிழ்த்து வைத்த கிண்ணம் போல் பாவாடையும் பஃப் கை சட்டையும்

தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம்.

உடையும் பாலின பேதமும் - 1

“பூனையிடமிருந்து காப்பாற்ற மீனை மூடிவைக்கலாம்” “மூடிய மிட்டாயை எறும்பு மொய்ப்பதில்லை”-இந்த டைனோசர் கால வசனங்களை சமூகம் இன்றும் பெண் உடை பற்றி சொல்கிறது.