UNLEASH THE UNTOLD

Tag: Celin Roy

திருமணத்தை மீறிய உறவு தீர்வாகுமா? - 2

பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள். 

திருமணத்தை மீறிய உறவு தீர்வாகுமா?

திருமண உறவில் ஏற்படும் எந்த விதமான பிரச்னைகளுக்கு, திருமண பந்தத்தைத் தாண்டி வெளியே வருதல் ஒரு நல்ல தீர்வாக அமையும்?

உச்சக்கட்ட உண்மைகள்

ஒரு ஆண், எதற்கெடுத்தாலும் ஒரு பெண்ணிடம் காரணமில்லாமல் அல்லது ஏதாவது காரணங்களை அவனாகவே கற்பித்துக்கொண்டு கத்தி சண்டையிடுகிறான் என்றால், அவன் அவள் முன் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவும் நம்பிக்கையற்றும் உணர்கிறான் என்று பொருள். அந்தக் கையாலாகாத்தனத்தை, தன் இயலாமையை மறைக்கத்தான் ‘கத்தும் யுக்தி’. 

பெண் - உணர்வுகளின் பொதியல்!

‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.