UNLEASH THE UNTOLD

Tag: Aangal Nalam

பிறந்தநாள் கொண்டாட்டம்!

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.

ஆண் டெவலபர்...

மீட்டிங்கில் அமர்ந்திருந்த ஏனைய ப்ரோக்ராமர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தனர். முக்கியமான ப்ராஜெக்டின் டெட்லைன் நெருங்கிவிட்டது. அதற்காகக் கூட்டப்பட்டிருந்த மீட்டிங் அது. அதில்தான் தன்னை முன்னிலைப் படுத்தி கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான் ஸ்ரீனிவாஸ்.

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...

சிபியின் வேலை சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த ராஜுவுக்கு அதுவரை சிபிக்கு பிரமோஷன் கிடைத்தது குறித்து எந்தப் பொருமலும் இருக்கவில்லை. சிபியின் இனிய பண்பினாலும் உதவும் மனப்பான்மையாலும் பணியிடத்தில் நல்லவிதமாகவே அறியப்பட்டிருந்தான். ஆனால், இப்போது இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜுவுக்குச் சுருக்கென்றது.

மாமியார் மெச்சும் மருமகன்!

ஆதிக்குச் சுர்ரென்று கோபம் மூண்டது. “ஆரம்பிச்சிட்டியா? அதான் ஒண்ணா இருக்க முடியலன்னு என்னைப் பிரிச்சிக் கூட்டி வந்துட்டே. எங்கம்மா எப்பவோ வராங்க என்னைப் பார்க்க. அவங்களுக்காகச் சமைக்க நீ கஷ்டப்பட வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.”

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…!

சட்டென்று எல்லா வேதனைகளும் மறந்து முகம் மலர்ந்தான் சிபி.
ஆயிரம் கஷ்டங்கள் திருமண வாழ்க்கையில் இருந்தாலும் மாமனார், மாமியார் கொடுமைகளைத் தினசரி சகித்தாலும் குடிகாரியாக இருந்தாலும் ஆதி ஏகபதிவிரதை; தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை ஐஸ்க்ரீமின் சுவையில் உணர்ந்தான் சிபி. பசித்தது, சாப்பிட வேறு இல்லை அல்லவா?

திருமணத்துக்குப் பிறகும் வேலை செய்வாயா சுரேஷ்?

“சாரி, எங்கள் கம்பெனியில் பல ஆண்களும் இப்படித்தான் திருமணமானதும் பொறுப்பின்றி வேலையை விட்டுவிடுகிறார்கள். We have least attrition rate with women… அதனால் இந்தப் பதவிக்கு நாங்கள் ஒரு பெண்ணைத்தான் தேர்வு செய்ய இருக்கிறோம். Very sorry!”

சிபி, ஒரு டீ...

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.