கேள்வி
6-7 மாதக் குழந்தையை வாக்கரில் உட்கார வைக்கலாமா?
பதில்
7-8 மாதக் குழந்தை மண்டி போட்டு தவழ ஆரம்பிக்க வேண்டும். 4- 5 மாதங்களில் குப்புற விழும் குழந்தை, பிறகு கை கால் மூட்டிகளை ஊன்றிக் கொண்டு தவழ ஆரம்பிக்கும். பிறகு உட்காரும், நிற்கும், நடக்கும், ஒரு வயதிற்குள் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
உட்கார, நிற்க, நடக்க குழந்தைகளுக்கு முதுகெலும்பு நேராக பேலன்ஸ் ஆக வேண்டும். அதற்கு குழந்தை மெதுவாக பழக்கிக் கொள்ளும். இடுப்பு எலும்பு,கால் எலும்புகள், முட்டுகள் ஆகியவையும், கால் தசைகளும் போதிய வலுப்பெற்று பாதங்களை முழுமையாக ஊன்றி ஒருவித ஒருங்கிணைப்புடன் குழந்தை நடக்க ஆரம்பிக்கிறது. இவையெல்லாம் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்பவும், குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்திற்கு ஏற்பவும் நிதானமாகத் தொடர்கிறது.
வாக்கரில் உட்கார வைப்பது சரியல்ல. சரியாக நிமிர்ந்து உட்காராத பருவத்தில் குழந்தையை நடக்க வைக்கக் கூடாது. வாக்கரில் சக்கரம் இருப்பதால் அதுவும் குழந்தையுடன் ஓடும். இது குழந்தைக்கு நடப்பதற்கான பயிற்சியாகாது. எலும்புகள் வயதிற்கு ஏற்ப வலுப்படாத வயதில் நிற்க வைப்பது எலும்புகளின் வளர்ச்சியை குறைக்கும். அவற்றை பலவீனப்படுத்தும். நடக்க ஆரம்பிக்கும் போது குழந்தை கால்களை பரவலாக வைத்துக் கொண்டு கைகளையும், உடம்பிலிருந்து சிறிது தள்ளி வைத்துக் கொண்டு நடக்கும். இதெல்லாம் பேலன்ஸ் கிடைப்பதற்குத் தான்! மேலும் பாதங்களை நிதானமாக நன்கு தரையில் பதித்து நடக்கும். இது தரையின் தன்மை, மேடு பள்ளங்களை உணர்ந்து நடப்பதற்கான முயற்சிதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று சொன்னால் பயந்து விட மாட்டீர்களே! வாக்கரில் உட்கார வைத்து பழக்கப்படுத்தப்படும் குழந்தை தானாக நடப்பதற்கு முயற்சி செய்யாது.நடை மிகவும் தாமதப்படும். தானாக நடக்க குழந்தைக்கு பிடிக்காது.
நம்ம பாட்டி தாத்தா பாணி தான் கரெக்ட்! அழகான மூன்று சக்கரங்களுடன் நடை வண்டியை வாங்கி கொடுத்து பழக்குங்கள். குழந்தை தானாக கையில் பிடித்துக் கொண்டு எழுந்து நின்று ஓரிரு அடிகள் வைத்து ஆரம்பிக்கும் போது நடைவண்டி தான் சிறந்தது. சிறு குழந்தையை தைரியத்துடன் எளிதில் நடக்க வைக்கும். நானே நடக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும், குழந்தைக்கு ஏற்படுத்தும். குழந்தை தானாக நடக்க ஆரம்பித்தபிறகுதான் நடைவண்டியையும் பயன்படுத்தலாம். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக் மற்றும் உலோக கம்பிகள் கொண்ட வாக்கர் உடையலாம். அதிலிருந்து குழந்தை கீழே விழலாம். காயங்கள் ஏற்படலாம்.
ஏம்மா இந்த வீண் வம்பு !பரணில் பாருங்க கட்டாயம் நடைவண்டி இருக்கும்.
கேள்வி
ராஜீவுக்கு 7 வயது, இரவு 11 மணிக்கு தான் தூங்குகிறான் காலையில் பள்ளிக்குப் போக எழுப்புவது கஷ்டமாக இருக்கிறது?
பதில்

ஒரு பழமொழி தெரியுமா? (பூமர் மொழி) Early to Bed Early to Rise! சீக்கிரம் தூங்கினால்தான் காலையில் சீக்கிரம் கண்விழிக்க முடியும்.
தோழி! இந்த கேள்விக்கு இரண்டு பகுதிகளாக தான் பதில் சொல்ல வேண்டும். முதலில் ராஜீவ் 11 மணி வரை என்ன செய்கிறான்? விளையாட்டா? டன் கணக்கில் வீட்டுப் பாடமா? கைபேசியா? தொல்லைக்காட்சியா? (எழுத்துப் பிழை இல்லை தொல்லைக் காட்சிதான்)
என்ன காரணமாக இருந்தாலும் அதனை மாற்ற வேண்டும். வீட்டுப் பாடமானால் மாலை வந்தவுடன் ஆரம்பித்து செய்து முடிக்க செய்யலாம். பள்ளியில் நடக்கும் பெற்றோர் கூட்டங்களில் பேசி வீட்டுப்பாடங்களை குறைக்க சொல்லலாம்! பள்ளிக்குச் சென்று வந்த பிறகு அவ்வளவு நேரம் ஓடி ஆடி விளையாட குழந்தைக்கு தெம்பு இருக்காது. கைபேசி அல்லது TV காரணமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவது முற்றிலும் உங்கள் (வீட்டில் உள்ள அனைவரின்) கைகளில் தான்.
குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க சில முயற்சிகளை செய்யலாம். பாரதியார் சொன்ன “மாலை முழுதும் விளையாட்டு” உத்தியைப் பின்பற்றி 1-2 மணி நேரம் விளையாட்டில் ஈடுபடுத்தலாம். ஓடி ஆடி விளையாடினால் களைப்பு மிகுதியால் சாப்பிட்டவுடன் குழந்தை கிடைத்த இடத்தில் படுத்து தூங்கிவிடும். இரவு 9 மணி அளவில் குழந்தை தூங்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்கூல் விட்டு 5 மணிக்கு வந்தால், 1 1/2 மணி நேரம் விளையாட்டு, 1மணி நேரம் டியூஷன், 1 மணி நேரம் வீட்டுப்பாடம், 1/2 மணி நேரம் இரவு சாப்பாட்டுக்கு பின் வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ந்து பேசி சிரித்துப் பிறகு 9 மணிக்கு தூங்கலாம். இரவில் இளஞ்சூடாக பால் கொடுப்பது தூக்கம் வருவதை எளிதாக்கும். தூங்கும் நேரம் வந்ததும் அவனைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று விட வேண்டும். விளக்குகளை நிறுத்தி, காற்றாட சௌகரியமாக படுக்க வைத்து அவனுடன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி சிறிது நேரம் மகிழ்வாக பேசலாம்.Bed Time Stories தெரியும் அல்லவா? தூங்கும்போது கதை சொல்லுங்கள்.
குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பது சிரமம் தான். தூங்கும் இடத்தில் டிவி, அலைபேசி, வீடியோ கேம் போன்ற எதுவும் இருக்கக் கூடாது. மெல்லிய குரலில் அவனுடன் பேசலாம், பாடலாம், பாட சொல்லி கேட்கலாம். குழந்தையை படுக்க வைக்கும் நேரம் வீட்டின் அனைத்து நடவடிக்கைகளும் குறைக்கப்பட வேண்டும். குடும்பத்தினர் சத்தம் போட்டு பேசுவது, சிரிப்பு, பேச்சு, சண்டை, டிவி சத்தம் கேட்டால் குழந்தைக்கு தூக்கம் வராது. எல்லோரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். குழந்தையை தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் அவனுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அட்வைஸ் Mode-க்கு போகக்கூடாது.
காலையில் பள்ளிக்கூட நேரத்திற்கு ஏற்ப வேலைகள் நேரத்தை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். காலைக்கடன்களை முடித்து, குளித்து, நிதானமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டிய நேரத்தை கணக்கிட்டு இதனை செய்ய வேண்டும். சிறுவனை எழுப்பி முகம் கழுவி பல்துலக்கி நன்கு விழிப்பு கொண்டு வர வேண்டும். இளம் சூடான பால் அல்லது காய்கறி சூப் தரலாம். வாசல் பக்கமாக வெயிலில் 10 – 15 நிமிடம் நடக்க, விளையாட வைக்க வேண்டும். அவனுடன் பேச்சு கொடுத்து இவற்றை செய்ய வேண்டும்.டான்ஸ் அல்லது ஸ்போர்ட்ஸ்க்கு முன்னாடி வார்ம் அப் இல்லையா? அதுபோலதான் இதுவும்! பிறகு குளியல், காலை உணவு வழக்கம் போல் இப்படி செய்தால் எல்லாம் நேரப்படி, அவசரம் இல்லாமல் நடந்தால். குழந்தை நேரத்தில் எழுந்து விடுவான். நேரத்தைப் பின்பற்றி நடந்துகொண்டால் அவனுக்கு ஊக்கமளித்து பரிசுகள் தரலாம்.
பகல் நேரத் தூக்கத்தைக் குறைக்க முயற்சிக்கலாம். தினமும் மொத்தமாக 10 – 12 மணி நேரம் தூக்கம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தூக்க நேரம் என்பது ஒரு பழக்கம். அதுக்கு தூக்க மருந்துகள் கொடுக்க முடியாது.
படுக்கை நேரம் போராட்டமாக இருக்கிறது என்று உணர்கிறீர்களா?கரெக்ட் தான் ! ஆனால் முயலாமை தோல்விக்கு வித்திடும் அல்லவா?
முயற்சி கேள்வி:
ராஜீவுக்கு 7 வயது, இரவு 11 மணிக்கு தான் தூங்குகிறான் காலையில் பள்ளிக்குப் போக எழுப்புவது கஷ்டமாக இருக்கிறது?
பதில்:
ஒரு பழமொழி தெரியுமா? (பூமர் மொழி) Early to Bed Early to Rise! சீக்கிரம் தூங்கினால்தான் காலையில் சீக்கிரம் கண்விழிக்க முடியும்.
தோழி! இந்த கேள்விக்கு இரண்டு பகுதிகளாக தான் பதில் சொல்ல வேண்டும். முதலில் ராஜீவ் 11 மணி வரை என்ன செய்கிறான்? விளையாட்டா? டன் கணக்கில் வீட்டுப் பாடமா? கைபேசியா? தொல்லைக்காட்சியா? (எழுத்துப் பிழை இல்லை தொல்லைக் காட்சிதான்)
என்ன காரணமாக இருந்தாலும் அதனை மாற்ற வேண்டும். வீட்டுப் பாடமானால் மாலை வந்தவுடன் ஆரம்பித்து செய்து முடிக்க செய்யலாம். பள்ளியில் நடக்கும் பெற்றோர் கூட்டங்களில் பேசி வீட்டுப்பாடங்களை குறைக்க சொல்லலாம்! பள்ளிக்குச் சென்று வந்த பிறகு அவ்வளவு நேரம் ஓடி ஆடி விளையாட குழந்தைக்கு தெம்பு இருக்காது. கைபேசி அல்லது TV காரணமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவது முற்றிலும் உங்கள் (வீட்டில் உள்ள அனைவரின்) கைகளில் தான்.
குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க சில முயற்சிகளை செய்யலாம். பாரதியார் சொன்ன “மாலை முழுதும் விளையாட்டு” உத்தியைப் பின்பற்றி 1-2 மணி நேரம் விளையாட்டில் ஈடுபடுத்தலாம். ஓடி ஆடி விளையாடினால் களைப்பு மிகுதியால் சாப்பிட்டவுடன் குழந்தை கிடைத்த இடத்தில் படுத்து தூங்கிவிடும். இரவு 9 மணி அளவில் குழந்தை தூங்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்கூல் விட்டு 5 மணிக்கு வந்தால், 1 1/2 மணி நேரம் விளையாட்டு, 1மணி நேரம் டியூஷன், 1 மணி நேரம் வீட்டுப்பாடம், 1/2 மணி நேரம் இரவு சாப்பாட்டுக்கு பின் வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ந்து பேசி சிரித்துப் பிறகு 9 மணிக்கு தூங்கலாம். இரவில் இளஞ்சூடாக பால் கொடுப்பது தூக்கம் வருவதை எளிதாக்கும். தூங்கும் நேரம் வந்ததும் அவனைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று விட வேண்டும். விளக்குகளை நிறுத்தி, காற்றாட சௌகரியமாக படுக்க வைத்து அவனுடன் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி சிறிது நேரம் மகிழ்வாக பேசலாம்.Bed Time Stories தெரியும் அல்லவா? தூங்கும்போது கதை சொல்லுங்கள்.
குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பது சிரமம் தான். தூங்கும் இடத்தில் டிவி, அலைபேசி, வீடியோ கேம் போன்ற எதுவும் இருக்கக் கூடாது. மெல்லிய குரலில் அவனுடன் பேசலாம், பாடலாம், பாட சொல்லி கேட்கலாம். குழந்தையை படுக்க வைக்கும் நேரம் வீட்டின் அனைத்து நடவடிக்கைகளும் குறைக்கப்பட வேண்டும். குடும்பத்தினர் சத்தம் போட்டு பேசுவது, சிரிப்பு, பேச்சு, சண்டை, டிவி சத்தம் கேட்டால் குழந்தைக்கு தூக்கம் வராது. எல்லோரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். குழந்தையை தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் அவனுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அட்வைஸ் Mode-க்கு போகக்கூடாது.
காலையில் பள்ளிக்கூட நேரத்திற்கு ஏற்ப வேலைகள் நேரத்தை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். காலைக்கடன்களை முடித்து, குளித்து, நிதானமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டிய நேரத்தை கணக்கிட்டு இதனை செய்ய வேண்டும். சிறுவனை எழுப்பி முகம் கழுவி பல்துலக்கி நன்கு விழிப்பு கொண்டு வர வேண்டும். இளம் சூடான பால் அல்லது காய்கறி சூப் தரலாம். வாசல் பக்கமாக வெயிலில் 10 – 15 நிமிடம் நடக்க, விளையாட வைக்க வேண்டும். அவனுடன் பேச்சு கொடுத்து இவற்றை செய்ய வேண்டும்.டான்ஸ் அல்லது ஸ்போர்ட்ஸ்க்கு முன்னாடி வார்ம் அப் இல்லையா? அதுபோலதான் இதுவும்! பிறகு குளியல், காலை உணவு வழக்கம் போல் இப்படி செய்தால் எல்லாம் நேரப்படி, அவசரம் இல்லாமல் நடந்தால். குழந்தை நேரத்தில் எழுந்து விடுவான். நேரத்தைப் பின்பற்றி நடந்துகொண்டால் அவனுக்கு ஊக்கமளித்து பரிசுகள் தரலாம்.
பகல் நேரத் தூக்கத்தைக் குறைக்க முயற்சிக்கலாம். தினமும் மொத்தமாக 10 – 12 மணி நேரம் தூக்கம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தூக்க நேரம் என்பது ஒரு பழக்கம். அதுக்கு தூக்க மருந்துகள் கொடுக்க முடியாது.
படுக்கை நேரம் போராட்டமாக இருக்கிறது என்று உணர்கிறீர்களா?கரெக்ட் தான் ! ஆனால் முயலாமை தோல்விக்கு வித்திடும் அல்லவா?
முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி உங்களுடையதே!செய்யுங்கள்! உறுதியாக வெற்றி உங்களுடையதே!
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.