UNLEASH THE UNTOLD

அனுரத்னா

மூன்றாம் மும்மாதம்

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.

இரண்டாம் மும்மாதம்

18வது வாரம்

குழந்தை விரல் சூப்புவது, கொட்டாவி விடுவது இதை எல்லாம் தெளிவாக ஸ்கேன் மூலம் காணமுடியும் இவ்வாரத்தில். தாயின் வயிற்றில் லேசான அசைவை கொடுத்தால்கூட கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கண் இமைகள், கண்மணிகள் அசையும். தாயின் தொப்புளுக்குச் சற்று கீழேவரை கர்ப்பப்பை வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

முதல் மூன்று மாத கர்ப்ப காலம்

8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

குடும்பக் கட்டுப்பாடு

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

கருக்கலைதல்

கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் எனும் ஆபத்து...

கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.