தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்
இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.