UNLEASH THE UNTOLD

Top Featured

மெனோபாஸும் உடல் பருமனும்

மெனோபாஸ் என்பது கருமுட்டை உருவாவதை நிறுத்தக்கூடிய விஷயம். அது தவிர மேலை நாடுகளில் பெண்களின் சராசரி வயது 80 என வைத்தாலும் 50க்கும் பின் முப்பது ஆண்டுகள். அதாவது வாழ்வில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் மெனோபாஸ் ஆன பின்புதான் இருக்கிறது. எனவே மெனொபாஸுக்குப் பின் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியமானது.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

ஆண்கள் வேலை செய்வதை முதலில் பெண்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆண்கள் தங்கள் வீட்டுக் கழிவறை, குளியலறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்? சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல் போன்ற பொதுவான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் பாலினப் பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே குழந்தைகள்!

நம்மில் எத்தனை பேர், பெற்றோராக இருத்தல் என்பது கடினமான, அர்ப்பணிப்பு மிகுந்த, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க வேலை என்பதை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளோடு பெற்றோராக ஆனோம்?

அரசியல் உரையாடலைப் பதின்ம பருவத்தில் தொடங்குவோம்!

எங்கும் அப்பாவுடன் கூடவே செல்லும் தென்றல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்க, அப்பாவும் தனக்குத் தெரிந்ததை மகிழ்வோடு பதில் சொல்வார். தன் குழந்தை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாளே என்ற பெருமிதம் இருக்கும். பொண்ணு இப்படி எடக்குமடக்காகக் கேள்வி கேட்கிறாயே என்று ஒரு நாளும் சொன்னதில்லை. மாறாக ஊக்கம் அளித்தே வந்தார்.

மெனோபாஸ் ஹாட் ஃப்ளஷ்

சில நேரம் இது பொது இடங்களில் சில பெண்களுக்கு வந்துவிடும். எல்லோரும் இதைப் பார்ப்பார்கள் என்ற பயமும் அவர்களுக்கு வந்துவிடும். பதற்றப்பட்டுக்கொண்டு பலர் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். இது முடிந்தவுடன் சிலருக்குப் பதற்றம் ஏற்படுவதும் இயற்கைதான். இதை என்ன செய்தாலும் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை. இதை எப்படி ஏற்றுக்கொண்டு மெனோபாஸைக் கடப்பது என்பதுதான் சவால். 

இனச்சார்பு தான் இனப்படுகொலைக்கான தொடக்கப் புள்ளி

இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.

பெண்களே ஆண்களைத் தேர்ந்தெடுக்கட்டும்!

சுய சார்பும் சுயமரியாதையும் கொண்ட ஒரு பக்குவமடைந்த பெண்ணால் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஆண், பெண்களை மதிப்பவனாகவும் தன் சக உயிராக நினைப்பவனாகவும் காதலிக்கத் தெரிந்தவனாகவும், நல்ல தோழனாகவும், அந்தப் பெண்ணிற்குப் பொருத்தமானவனாகவும் வாழ்க்கைத் திறன்கள் கற்றவனாகவும் பிரியும் நிலை ஏற்படும்போது, கண்ணியத்துடன் விடைபெற்றுச் செல்பவனாகவும் இருப்பான்.

படிக்கும்போதே திருமணம் செய்தால்...?

இது போன்றே சில மாணவியரின் வாழ்க்கையில் சவாலாக ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றையும் லட்சுமி டீச்சர் வழியாக அறிந்துகொண்டு, தன் உலகத்தை விரிவாக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்த பைரவி, தற்போது சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

விதவை, மலடியின் எதிர்ச்சொல் என்ன?

பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.

கவிழ்த்து வைத்த கிண்ணம் போல் பாவாடையும் பஃப் கை சட்டையும்

தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம்.