UNLEASH THE UNTOLD

ஸ்ரீதேவி மோகன்

சுதந்திர வானில் பறந்தவர்!

அப்பாவின் கதைகளைப் படித்தும் வானொலி நாடகங்களைக் கேட்டும் ரசித்ததோடு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களையும் எடுத்துரைத்ததை ரசித்துப் பாராட்டும் விதமாக பார்க்கர் பேனாவில் ‘கோமதி சுப்பிரமணியம்’ என்று பெயர்பொறித்து ‘நீயும் எழுதத்தொடங்கு’ என அம்மாவிற்கு அந்தப் பேனாவைக் கொடுத்திருக்கிறார் அப்பா. திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் ஊக்கத்தோடு தன் முதல் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார் அம்மா.

தள்ளாடிய வயதிலும் தள்ளாடாத இலக்கிய ஆர்வம் - எழுத்தாளர் பூரணி அம்மாள்

கவிதைகள் எழுதுவதோடு இந்தியில் சாகித்யம் பெற்ற அம்மா, பல பெண்களுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வந்தார். இந்தியிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான சரஸ்வதி ராம்நாத் அம்மாவிடம் இந்தி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணங்களே வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன! - வி. உஷா

வாசிப்பதன் இனிமையைச் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டதுதான் என்னுடைய நல்வாய்ப்பாகத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கின்றன? ஏன், எதற்காக, எப்படி என்கிற கேள்விகள் இயல்பாகவே எழ ஆரம்பித்தன. ஊழ்வினை, பிறவிப்பயன் போன்ற எதுவும் நிஜமில்லை, அனைத்துமே மனிதன் உண்டாக்கியவை என்பதும் புரிய ஆரம்பித்தது. அதுவே எழுதவும் ஆதாரமாக இருந்தது. இருக்கிறது.

சூப்பர் மாம் சிண்ட்ரோம்

பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது சில நொடிகளாவது உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் ஆரோக்கியமும் தேவைகளும், உள்மன உணர்வுகளும் முக்கியமில்லையா?

பெண் என்பவள் பொருள் அல்ல, உயிர்

நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

த்ரில் (பெண்ணே நீ இயந்திரம் அல்ல)

ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அடிமைப்படுத்த கண்டுபிடித்த ஆயுதங்களிலே அதி அற்புதமானது தாய்மை என்பது தான்.

சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

சவுந்தரி

இளவயது மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டுப் போவதா துறவறம்? அதற்கு என்ன பெரிதாக தைரியம் வேண்டி இருக்கிறது?

வதம்

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.