UNLEASH THE UNTOLD

இலக்கணம் மாறுதே…

இலக்கணம் மாறுதே... 6

எதிரே தெரிந்த கண்ணாடியில் அவளைப் பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. தர்மசங்கடமாக இருந்தது. வாரப்படாத தலைமுடி. சாயம் போன ஒரு நைட்டி. அதுவும் பின்னால் கிழிந்து தொங்கியது. பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவளுக்கே அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. கையில் குழந்தையையும் தலை சாயக்கூட இடமற்று நிற்கும் தன்னையும் பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இலக்கணம் மாறுதே... 5

ஆண்களும் பெண்களும் இருக்குற க்ரூப்ல இப்படிப் பதிவு செய்வதுகூட அவர்களுக்குத் தவறாக தோணவே இல்லையா? ஷாலினி, ஆண்களில் பல பேருக்குத் தங்களை ஆணாதிக்கவாதிகளாகக் காட்டிக் கொள்வதற்கும், அதுதான் சரி எனச் சொல்லித் திரிவதற்கும் தயக்கம் இல்லை. சரி, க்ரூப்பில் எத்தனை பெண்கள் வாய் திறந்தார்கள்?.

இலக்கணம் மாறுதே... 4

இரண்டு நாள் கழித்து கம்ப்யூட்டரை ஆன் செய்தவளுக்கு, மெயில் பாக்ஸில் இருந்த அத்தனை மெயில்களையும் பார்த்து தலை சுற்றியது. இரண்டு நாள் லீவ் எடுத்தாலே இதுதான் பிரச்னை. சரி, பார்த்துக்கலாம் என்றவாறே கண்களை ஸ்க்ரீனில் பரவவிட்டாள்.

பின்னால் நின்று கொண்டு, கைகளில் இருந்த பேப்பரால் மெதுவாக ஷாலினியின் தோளில் தட்டி, ஹலோ என்றான் நவீன். அவள் திரும்பும் வேளையில் பக்கத்தில் இருந்த சேரைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ஷாலினியின் பக்கத்தில் உட்கார்ந்தான். “என்ன ஆச்சு? கொஞ்சம் டல்லா இருக்குறது போல இருக்கு. ஏதாச்சும் பிரச்னையா?” என்று கரிசனத்துடன் கேட்டான்.

இலக்கணம் மாறுதே... - 3

ரமேஷ் தன்னிடம் அன்பாக இருப்பதில்லை. முகம்கொடுத்து பேசுவதுகூட இல்லை. ஆனால், இப்போது ரமேஷ் அடுத்த நபரிடம் கட்டிய பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசுவான் எனவும் தெரிந்தது. ‘ஐயோ, இந்தாள நம்பியா நான் புள்ள பெத்துக்கிட்டேன்… கடவுளே’ என நினைக்கையிலே, மனமும் உடலும் வலித்தது.

இலக்கணம் மாறுதே... 2

அதே ஆபிசில் தங்களுடன் ஒருத்தியாக வேலை பார்த்த கீர்த்தியும் அவளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட மோகனும், ஷாலினியின் ஞாபகத்துக்குள் வந்து போனார்கள். மோகன் ஆர்த்தியைப் போட்டுவிட்டதாகச் சொல்லி, அதற்காக ஆபிஸ் ஆண் நண்பர்களுக்கு கொடுத்த பார்ட்டியும், கீர்த்தி அவமானத்தில் ஆபிஸ் மாறிச் சென்றதும் ஷாலினியின் மூளை எடுத்துச் சொன்னது.

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.