UNLEASH THE UNTOLD

அறிவதுவே

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

தவறிப் போதல்... 

முதலில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள். ஒரு மனிதனின் உடலில் பாலினம் சார்ந்த செல்கள் அதாவது ஆணுக்கு விந்தணு, பெண்ணுக்குக் கருமுட்டை இவற்றைத் தவிர மீதி எல்லா செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்தப் பாலினம் சார்ந்த செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டும்தான் இருக்கும். 46 குரோமோசோம்களிலிருந்து 23 குரோமோசோம்களாகக் குறையும் இந்த நிகழ்வை ஒடுக்கற்பிரிவு (meiosis) என்று அழைப்பர். இது பாலினம் சார்ந்த செல்களில் (gonad cells) மட்டும்தான் நடக்கும்.

புரியாத புதிர்கள் 

குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்‌

பாலினம் அறியலாமா?

மரபணு ஆலோசனை மையங்களுக்கென்றே தனி நெறிமுறைகளும் உண்டு. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க‌ வேண்டும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைதான் வேண்டும் என்று பாலினத்தின் அடிப்படையில் எந்தத் தனிப்பட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது.

பெருந்தொற்று

தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு வருவோம். ஒரு நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அந்தத் தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவதுவே!

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு மாமரத்தில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக முடியும் என்பதுதான் ஓரறிவு உயிரினங்களும் மரபணுக்களைக் கடத்துவதற்கான சான்று. இதைத்தான் மரபியலின் தந்தையான கிரிகர் ஜான் மெண்டல் (Gregor John Mendel) பட்டாணியில் நிகழ்த்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.