UNLEASH THE UNTOLD

Year: 2023

விபாஸனா

நான் உலகத்தோடு கலந்ததாக, அப்படி எல்லாம் இல்லை; உலகம் தனியாக அப்படியே இருக்கிறது. நானில்லை. நான் என்பதே இல்லை. ‘நான்’ என்று எவ்வெப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிற எதுவுமே இல்லை. அந்த உணர்வில், பிடித்தம் பிடிக்காமை, பயம் வெறுப்பு நேசம் எந்த உணர்வுத் தீவிரமும் அதில் இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு ஜன்னல் வழி உலகம், ஜன்னலற்றுத் தெரிவது போல. அவ்வளவுதான்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

நளினி ஜமீலா

கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததுடன் நிறுத்திவிடாமல் ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

<strong>அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளர்</strong>

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.

பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

இந்தக் காலத்து ஆண்களே இப்படித்தான். திருமணத்துக்கு முன்பு நல்ல மனைவி வேண்டும் என்று விரதமிருக்கிறீர்கள், கோயிலுக்கு நடையாக நடக்கிறீர்கள், மாமனார் மெச்சும் மருமகனாக இருக்க வேண்டுமென்று வீட்டு வேலைகள் செய்து பழகுகிறீர்கள். திருமணம் என்று ஒன்று நடந்து மனைவியும் கொஞ்சம் நல்லவளாக அமைந்து விட்டால் போதும். அவரது அன்பிலும் செல்லத்திலும் அப்படியே மயங்கிச் சோம்பேறியாகி விடுகிறீர்கள்.

தைரியசாலியின் பயங்கள் பயங்கரமானவை...

கூச்சம், தயக்கம், பயம் என்கிற உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இல்லாவிடில் இத்தனை சுதந்திரம் உள்ளதாக நம்பப்படுகிற ஆண்கள் இந்நேரம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும்தானே? அந்தத் தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசும் நம்பகத் தன்மை வரவும், நம்மை அதைப் பற்றி எல்லாம் உரையாட அனுமதிப்பதுமே பெரும் சவாலாக இருந்தது. கடல் அலைகள் போலத்தான்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே உள்ள அலைகளைத் தாண்டிவிட்டால், இருவருமே கடல்தான். ஒத்த உயிரினம்தான்.

காலநிலை மாற்றமும் பெண்களும்

ஓர் இடத்தின் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்படும்போது, அங்கு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகவோ பிழைப்பு தேடியோ வேறு இடத்துக்குச் செல்வார்கள். இது காலநிலை புலம்பெயர்வு (Climate Migration) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு இடம்பெயரும் பெண்கள் புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்னொருபுறம், விவசாயமோ இயற்கை சார்ந்த தொழிலோ காலநிலை மாற்றம் காரணமாகப் பொய்த்துப்போய்விட்டால், ஆண்கள் மட்டுமே பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் செல்வதும் நடக்கிறது.

<strong>இஸ்ரேலின் நெகேவ் பெடோயின் பெண்கள்</strong>

மீள்குடியேற்ற காலம் 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை பெடோயின் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததிலிருந்து பெடோயின் சமூகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பாலினங்களுக்கிடையேயான இடைவெளி, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல்களின் தோற்றம் இதில் அடங்கும். நாடோடி காலத்தில் வளர்ந்த மூத்த பெண்கள் தங்கள் பாரம்பரியப் பாத்திரங்களை இழந்தனர்.

வெண்ணான்சியா எனும் தேவதை

ஓங்கும் கைகளைத் தாக்கும் முன்பு தடுக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பெண் என்பவள் நெருப்பு போல் வாழ வேண்டும் என்று புரிய வைத்தார். தலை குனிந்து நடந்த எங்களைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்தார்.