UNLEASH THE UNTOLD

Year: 2023

ஆண்கள் பலவீனமானவர்கள்...

2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.

எதிர்காலம்?

பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

உச்சுக் கொட்டும் நேரத்துல உச்ச கட்டம் தொட்டவளே... அப்படியா?

திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய ‘பல்பு’தான்!

கீமோதெரபி எனும் கடினமான காலம்

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிக்கவே கொடுக்கப்படும். அவை வெவ்வேறு வழிகளில் செயல்படும். பல்வேறு வகையான கீமோ மருந்துகள் உள்ளன. இருப்பினும், அனைத்து கீமோ மருந்துகளும் புற்றுநோய் போன்று வேகமாக வளரும் செல்களைக் கொல்லும். அப்போது நம் உடலில் புதிதாக உருவாகும் செல்களையும் கொன்றுவிடும். இதில் வெவ்வேறு மருந்துகள் புற்றுநோய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களைக் குறிவைக்கின்றன. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எல்லாருக்கும் ஒரே வகையான கீமோதெரபி மருந்துகள் கொடுக்கப்படுவது இல்லை. அவரவருக்கு ஏற்படும் புற்றுநோய் வகை, நிலை குறித்தே கொடுக்கப்படுகின்றன. அதனால்தான் புற்றுநோயாளிகளுக்கு வேதிசிகிச்சையின் போது நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

பெண் - உணர்வுகளின் பொதியல்!

‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

திருமணம் தாண்டிய உறவு

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

அப்பா எனும் தேவதை

சிறு வயது முதல் ஓடி ஓடி உழைத்து தானாக முன்னுக்கு வந்து, எப்படி வாழ வேண்டும் என்று அவர்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் தேவைகள் கனவுகளை நிறைவேற்ற 60 வயதாகியும் இன்றும் தேனீபோலச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நடமாடும் வழிகாட்டி அவள் அப்பா. கணினி அறிவியல் தொழில்நுட்பம் என்று எதுவும் அவள் அப்பாவுக்கு அப்பால் இல்லை. கற்றுக்கொள்ளும்போது மாணவராகிறார், அவளுக்கும் அவள் உடன்பிறப்புகளுக்கும் ஆசிரியரான அவள் அப்பா.

வருண், உனக்கு ஆட்டிட்யூட் ப்ராப்ளம்!

வருணுக்குத் தொண்டை அடைத்தது. எப்போதும் இப்படித்தான். கஷ்டப்பட்டு ஒரு வேலைக்கான அத்தனை தயாரிப்புகளையும் செய்து முடிப்பான். பெயர் தட்டிக் கொண்டு போவது ஷீலாவோ ஜான்சியோதான். இவனுக்கென்று சரியாக அப்போது வீட்டுக் கடமைகள் லீவோ பெர்மிஷனோ வேறு போட வைக்கும்.

குடும்பத்திற்கு அப்பால் விரியும் பெண்ணின் உலகம்

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?