UNLEASH THE UNTOLD

Year: 2023

வேட்டையாடும் ‘ஆகா’ பெண்கள்!

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.

நிழலும்  நிஜமும் -  திரைப்படங்கள்

நமது தமிழ்த் திரைப்படங்களும் நம் காதல் மற்றும் கூடல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள நமக்காற்றிவரும் தொண்டைப்(?) பற்றி இங்கே கட்டாயம் பேசியாக வேண்டும்.

சாகித்ய அகாடமி கொண்டாடிய நூற்றாண்டு விழா நாயகி!

அம்மாவின் பனித்துளி நாவல் ரொம்ப பிரபலமாக்கியது. அம்மா பனித்துளி நாவல் எழுதியபோது நிறைய தோழிகள், ‘இந்த நாவலை எழுதியது உங்க அம்மாதானே நாங்க பார்க்கணும்’ என்று சொல்லி அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடைய அம்மாக்களோ அம்மாவை நவராத்திரிக்கு வரச்சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போதுதான் அம்மா ஒரு பெரிய எழுத்தாளர் என்று உணர்ந்தேன். அம்மாவுடைய அருமை பெருமையைக் காலந்தாழ்ந்த பின்னே நாங்கள் புரிந்துகொண்டோம்.

இருண்ட கடல்

அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் கொரோனா தகர்த்தெறிந்தது. நிலா அவளது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தாள். அவனுக்கு வீட்டிலிருந்தபடியே மடிக்கணியின் மூலம் ட்ரெயினிங் தொடங்கியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்கள். வீட்டில் இருந்ததால் நிறைய நேரம் பேசிக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர்களின் அன்பின் சாரல் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.

அரச நோய்

இது தவிர குடும்பத்தில் யாருக்கேனும் ஹீமோஃபிலியா இருப்பின் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் கேரியர் டெஸ்டிங் செய்துகொள்வதும் கேரியராக இருப்பின் திருமணத்திற்கு முன்பும், குழந்தைக்காகத் திட்டமிடும் போதும் மகப்பேறு காலத்திலும் மரபணு ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.

மனைவியை இழந்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை

“மனைவி இறந்தப்புறமும் அழகா இருந்தா மத்த பொண்ணுங்க தொல்லை கொடுப்பாங்கல்ல? அதுக்காக அப்படி ஒரு பழக்கம் நம்ம முன்னோர்கள் வெச்சிருந்தாங்க. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இது கலிகாலம் நிறைய கெட்டுடுச்சு. நிறைய பழக்கமும் மாறிடுச்சு. பொண்டாட்டி செத்தாகூட மீசையும் தாடியும் கலர் ட்ரெஸ்ஸுமா ஹாட்டா சுத்துறாங்க. பழகிக்க வேண்டியதுதான். சரி, நீ போய்ப் படி.”

சுதந்திர வானில் பறந்தவர்!

அப்பாவின் கதைகளைப் படித்தும் வானொலி நாடகங்களைக் கேட்டும் ரசித்ததோடு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களையும் எடுத்துரைத்ததை ரசித்துப் பாராட்டும் விதமாக பார்க்கர் பேனாவில் ‘கோமதி சுப்பிரமணியம்’ என்று பெயர்பொறித்து ‘நீயும் எழுதத்தொடங்கு’ என அம்மாவிற்கு அந்தப் பேனாவைக் கொடுத்திருக்கிறார் அப்பா. திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் ஊக்கத்தோடு தன் முதல் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார் அம்மா.

பெண்கள் உடலுறவைத் தவிர்க்கும் தருணங்கள்

“என் மனைவிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளவே பிடிப்பதில்லை… தினம் தினம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுகிறாள்” என்று குற்றம் சாட்டும் கணவர்கள், முதலில் கீழேயுள்ள இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

சவாலே சமாளி

சவாலைப் பிரச்னையாகப் பார்க்கும் ஒருவர், அதை வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனும் பயத்துடனும் எதிர்கொள்கிறார். இந்த மனநிலையில் நாம் மிகச் சிறியவராகவும், பிரச்னை பெரிதாகவும் தோன்றும். நம்மைவிடப் பலமான எதிரியிடம் கண்டிப்பாகத் தோற்போம் என்கிற மனநிலையில் தோல்விக்கே வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஜெயித்தால் அவர் அதிர்ஷடத்தையோ கடவுளையோதான் காரணம் சொல்லுவாரேயன்றி தன் திறமையை அல்ல. அப்போது ஒவ்வொரு சவாலும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் நம் சிந்திக்கும், செயல்படும் திறனை மொத்தமாக அழித்துவிடும். வாழ்வு முழுவதும் போராட்டம்தான். சவால்கள் சாபம்தான்.