UNLEASH THE UNTOLD

Month: May 2022

விதவை, மலடியின் எதிர்ச்சொல் என்ன?

பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.

கவிழ்த்து வைத்த கிண்ணம் போல் பாவாடையும் பஃப் கை சட்டையும்

தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம்.

இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு...

குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? 

கண்ணாடியில் விழுந்த கீறல்கள்

20 வயது நிரம்பிய, வேலைக்குப் போய்க்கொண்டு சுயமாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் இளம்பெண் இப்படிப் பேசிக்கொண்டிருந்தார். “அம்மாவுக்குக் கோபம் வந்தால் எல்லாக் கோபத்தையும் என்மீது காட்டுவார்; அடித்துவிடுவார்; நன்றாக அடித்துவிடுவார்” என்று சொன்னார்.

இலங்கை அரசியலின் அணையாத வெம்மை

சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் உருவெடுத்தது. தொடர்ச்சியான போராட்டங்கள் 1983 க்குப் பின்னர் உள்நாட்டுப்போராக மாறியது. தமிழர்கள் கேட்ட, தமிழ் தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல, அடையாளத்துக்கான போராட்டம் என்பதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகநாடுகள்கூட புரிந்துகொள்ளவில்லை.

சமையல்கட்டை விட மனமில்லையா தோழிகளே?

பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.

பதின்ம வயது பெண்களைப் புரிந்துகொள்வோம்; அவர்களுக்கான வெளியை உருவாக்குவோம்!

“நான் யோசிச்சு பார்த்தேன் மிஸ். இந்தச் சடங்கெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். அதுக்குச் செலவு பண்றத என் படிப்புக்குச் செலவு பண்ணுங்க. நான் படிக்கணும்ங்கிறதுதான் நான் கேட்டதோட நோக்கமே!” என்றாள் குயிலி.

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா?

எதிர்த்து நிற்க வேண்டும். நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தன்னைத் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்று இனம்பிரிப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதைப் போலவே இங்ஙனம் கட்டவிழும் வன்முறையைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை இனியும் காட்ட இயலாது. பிறரை அடிக்க முற்படும் முன் தன் கன்னத்தையும் அடிப்பவன் தயார் செய்துகொள்ளட்டும்.

கல்வித் துறைக்கும் பொறுப்புள்ளது...

பெற்றோருக்குப் பொறுப்பு உளதைப்போல, அரசுக்கும் நல்லதொரு கல்வியைக் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். அதற்காக ஏராளமான தொடர் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது

பெண்ணுடல் மீதான வன்முறை: இந்தியாவின் இருண்ட பக்கங்களின் கசக்கும் உண்மை

பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள். பெண்கள் நவநாகரிகமாக இருத்தலும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.