UNLEASH THE UNTOLD

Tag: Yamini

சாப்ளினும் தோனியும்

சார்லி சாப்ளின் எண்ணற்ற அவமானங்கள், தோல்விகள். அதனால் ஏற்பட்ட உணர்வு சிக்கல்கள், அத்தனையும் கடந்து தன்னைப் பிறர் கேலி செய்வதையே பெரும் மூலதனமாக்கி வெற்றி கண்டார்.

உணர்வு சூழ் உலகம்

எந்த உணர்வும் அது மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் எதுவாகினும் அதன் அளவு கூடும்போது அது நமது நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்போது நாம் அதை வெளிப்படுத்தும் வழி பின்னாளில் நம்மை வருந்த வைக்கலாம் அல்லது மாற்ற முடியாத இழப்பை உண்டு பண்ணலாம். அந்தந்த நேரத்து உணர்வைச் சரியாகக் கையாள்வதின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.

உணர்வு சூழ் உலகம் - புதிய தொடர்

மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”

முடிவில்லா விளையாட்டு...

துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

துயரிலிருந்து எளிதில் வெளிவர...

நாம் இயற்கையின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் என்ற உணர்வு வரும்போது அதற்கான முதல் தகுதியாக மற்றவரின் மேல் பரிவும் கருணையும் கூடிவிடும். அவர்கள் இடத்தில் இருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்துக் கொண்டால், எந்த முயற்சியும் செய்யாமலே நீங்கள் மற்றவரின் மேல் பரிவு காட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.

உறவாடும் திறனை மேம்படுத்துவது எப்படி?

தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.

தலைமைக்கு முதல் தகுதி?

தலைவர்கள் எப்போதும் வேலையைச் சரியாக நடத்துவதில் கவனம் செலுத்துவதில்லை, அதைச் செய்பவர்கள் சரியான மனநிலையில் நல்ல உத்வேகத்தோடு இருக்கிறார்களா என்றுதான் பார்ப்பார்கள். வேலையைச் செய்யும் மனிதர்கள் சரியாக இருந்தால் வேலை நிச்சயமாகப் பிரமாதமாக அமையும்.

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

எதிர்மறை உணர்வுகளுக்கான தீர்வுகளைக் காண்போம்

யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.

எதிர்மறை உணர்வுகள்

உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.