பாதி கடித்த ருசி மிகுந்த பீச் பழம்
பழங்கால சீனாவின் பேரரசராக இருந்தவரின் காதலன் மிஜி ஸியா, ஒருநாள் அரசருடன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த போது, கனிந்து சாறு கொட்டும் ஒரு பீச் பழத்தைப் பாதி கடித்து சுவைத்து அதன் ருசியில் மயங்கியவன், மீதியை அரசருக்கு அளித்தான். அவர் அதை வாங்கிச் சுவைத்துக் கொண்டே தன் மீது அவன் கொண்டிருக்கும் அலாதியான காதலை ரசித்து உருகினார்.