வாழ்க்கையில் வீசிய புயல்...
“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. பேசாம ஞாயித்துக் கிழம கிளம்பாம ரெண்டு பேரும் திங்கக் கிழம எங்கூடவே கிளம்புங்களேன்” என்றான் பொன்துரை. வழக்கமாக இப்படி எல்லாம் சொல்பவனில்லை. ஏன் இப்படிச் சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு, “ஓ, இப்ப புரியுது. வழக்கம் போல மங்களத்தை நாங்க கிளம்புற அன்னைக்கு வராம அடுத்த நாள் வராங்களே. அதனால இவ வேற அவ அப்பாவுக்கு சேவகம் செய்யச் சொல்றாளேன்னு தானே எங்கள அடுத்த நாள் போகச் சொல்றே?”
