UNLEASH THE UNTOLD

Tag: Manoja

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நமக்கான நினைவுகளை உருவாக்குவோம்!

வாழ்வில் திரும்பிப் பார்த்தால் எனக்கான நாட்கள் சில இருக்க வேண்டும். என்னுடைய தோழியும் நானும் எங்களுக்கான தனியான நினைவுகளை உருவாக்க ஆரம்பித்து விட்டோம். எங்களால் வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல முடியாமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் புதிய இடங்களுக்குச் செல்ல முடியும்.

கணவன் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம உரிமை

தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

பூமி சமநிலை தவறிவிடுமா?

ஆண்கள் கோயிலில் நடக்கும் கூட்டத்துக்குச் செல்வது போன்று பெரிய முடிவுகளை எடுப்பார்கள். கோயிலில் சாமி கும்பிட நிற்கும் போது பெண்கள் எப்போதும் இடது பக்கத்தில் நிறுத்தப்படுவர். ஆண்கள் வலது பக்கத்தில் நிறுத்தபடுவர். பூசாரிகள் பிரசாதம் கொடுக்கும் போது முதலில் கொடுப்பது ஆண்களுக்குத்தான். அது மட்டுமின்றி ஏன் எப்போதும் பெண்கள் இடது பக்கத்தில் நிற்க வேண்டும்? வலது பக்கம் நின்றால் பூமி சம நிலை தவறி விடுமா?

எனோலா ஹோம்ஸ்

“உனக்கு உலகம் மாறத் தேவை இல்லை. ஏனென்றால் உனக்கு உலகம் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.” இப்படி அர்த்தமும் ஆழமும் நிறைந்த வசனங்கள் கதையில் அப்படியே பொருந்திப் போகும். எனோலா ஹோம்ஸ் இன்றைய பல பெண்களின் பிரதிபிம்பம். இன்னும் பல பெண்களின் வாழ்வு சிலந்திவலை போன்ற சமூக விதிமுறைகளிலும் குடும்ப கௌரவத்தின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மாரத்தான் ஓடப் பழகு

“சுயநலமாக இருங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்திற்காகச் சுயநலமாக இருங்கள். எனக்குப் புற்று நோய் பரிசோதனை செய்யும் போது என் மகளுக்கு நான்கு வயது. இப்போது என் மகள் இருபது வயதைத் தாண்டிவிட்டாள். நம் குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றிற்காகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்.”

ஏலியன்களா?

புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.

பெண்களே, கேள்வி கேளுங்கள்!

முக முக்கியமான விஷயம், நீங்கள் மட்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், எதிரில் இருப்பவர் பதில் மட்டும் கூறிக்கொண்டிருக்கிறார், கிட்ட தட்ட நீங்கள் கேட்பதற்கு எல்லாம் தலை ஆட்டுகிறார் என்றால் நம்பிவிடாதீர்கள்.

டிராபி வொய்ஃப்

ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.

புத்தகங்களும் பெண்களும்

இந்த வருடத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னோவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் இதுவரை 114 நோபல் பரிசுகள் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்டு இருக்கின்றன. அதில் 14 பரிசுகளை மட்டும் பெண்கள் பெற்று இருக்கின்றனர். இந்த எண்களே வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.