UNLEASH THE UNTOLD

Tag: M. Mabubee

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

ஹிஜாப்: மத நம்பிக்கையா? தனிநபர் சுதந்திரமா?

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வரை ஹிஜாப் அணிந்து சென்றிருக்கிறேன். பள்ளியில் என்னுடன் படித்த சக தோழிகள் புர்கா அணிந்தும் வந்திருக்கின்றனர். ஹிஜாபோ புர்காவோ சக மாணவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ எங்களது ஒற்றுமையிலோ எந்தவொரு குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. சக தோழிகள் அதை அணிந்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். புர்காவை மற்ற மாணவர்கள் விரும்பியதைப் போல புர்காவிலிருந்து வெளிவர நான் விரும்பினேன். கால மாற்றம், சமூக சூழல், வாசிப்பு, புர்கா அணிய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் என எல்லாம் அந்த மாற்றத்திற்குக் காரணங்களாகின.

மாதவிடாய் எனும் மண்டையிடி நாள்கள்

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, பூக்களைப் பறிக்கக் கூடாது, பூஜைப் பொருள்களைத் தொடக் கூடாது, குரான் ஓதக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, தொழுகக் கூடாது, வெளிப்படையாக (குறிப்பாக ஆண்கள்) பார்க்கும் வகையில் நாப்கின்களைக் கையாளக் கூடாது. உபயோகித்த துணியை ரகசியமாக அப்புறபடுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வடிவில் தீண்டாமை நம்மை விட்டுவைப்பதாக இல்லை. இஸ்லாத்தில் ஒதுக்கி வைக்கும் வழக்கம் இல்லை என்றாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றே இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அப்பா பெயர் ஏன் விருப்பத் தேர்வில் இல்லை?

அப்பா இறந்துவிட்டார் என்றால் பாவ மடல் வாசிக்கிறவர்கள்கூட, அப்பா உயிரோடுதாம் இருக்கிறார், விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னதும் பார்த்தாலே ‘தீட்டு’ என்பதுபோல் பார்ப்பார்கள். நாம் எப்போதுமே அவர்களுக்கு suspected people தான்.

பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்து : சுழல் & கார்கி

குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.