UNLEASH THE UNTOLD

Tag: language

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறீர்களா?

பேசும் செய்தி எதுவாகினும் அதை எப்படிச் சொல்கிறோம் என்பது அதி முக்கியம். நம் உடல் மொழி, குரல் தொனி, நேரான பார்வை, கண் வழியான தொடர்பு அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டோ, முதுகில் தட்டியோ நம் ஆதரவைத் தெரிவிக்கலாம். இது தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் இருப்பதால் கவனம் தேவை.

வாங்க பழகலாம்!

மொழி வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரும் பல மொழி கற்ற பிறகும் நாம் மற்றவருடன் தகவல்களை, உணர்வுகளைச் சிறப்பாகப் பரிமாறிக்கொள்கிறோமா என்றால் இல்லை. எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, நாம் பேசும் போது கேட்பவர் ஆர்வமாக கேட்கிறாரா அல்லது காயப்படுகிறாரா, மற்றவர் பேசும் போது எப்படிக் கேட்பது என்பதைப் பலர் கற்றுக் கொள்வதே இல்லை. இதனால்தான் பலர் அழகான உறவுகளை இழக்கிறோம்.

ஒரு தேசம்... ஒரு மொழி... ஒத்து வருமா?

பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.