‘அழகை ஆராதித்துதான் ஆகவேண்டுமா ?’
ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.