UNLEASH THE UNTOLD

Tag: Arivadhuve

உயிர் வங்கிகள்

பணம் சேமிக்கும் வங்கிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் உயிர் காக்கும் வங்கிகளில் ரத்த வங்கிகளைத் தவிர வேறு எந்த வங்கியையும் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்னென்ன வங்கிகள் இருக்கின்றன? விந்தணுக்கள்,…

உறவுகள்

சாதியக் கட்டமைப்பில் புரையோடி போன நம் சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் என் மனதில் இந்த மரபணுக் குறைபாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் தாய்மாமாவை,  அக்கா அல்லது தங்கையின்…

பருவகாலப் பதற்றங்கள்

சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத்…

10. பருவமெய்தல்

பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது),  அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…

65 ரோசஸ் 

தனக்கோ அல்லது தன் வீட்டிலுள்ளவர்களுக்கோ அரிய வகை குறைபாடு இருப்பது தெரியவந்ததும் அரிய நோய்களுக்கான பதிவேட்டில் (National registry for rare diseases – NRRoID) பதிவு செய்வதன் மூலம் அந்தக் குறைபாட்டிற்கான சிகிச்சை பெறும் இடம், மருந்து சார்ந்த தகவல்கள், ஏற்கெனவே அந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கென்றே செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய அரசின் முன்னெடுப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். 

ஏழாம் அறிவு

கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம்.‌ அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.

புற்றுநோயும் பெண்களும்

பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.‌ மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல்‌, இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

தவறிப் போதல்... 

முதலில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள். ஒரு மனிதனின் உடலில் பாலினம் சார்ந்த செல்கள் அதாவது ஆணுக்கு விந்தணு, பெண்ணுக்குக் கருமுட்டை இவற்றைத் தவிர மீதி எல்லா செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்தப் பாலினம் சார்ந்த செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டும்தான் இருக்கும். 46 குரோமோசோம்களிலிருந்து 23 குரோமோசோம்களாகக் குறையும் இந்த நிகழ்வை ஒடுக்கற்பிரிவு (meiosis) என்று அழைப்பர். இது பாலினம் சார்ந்த செல்களில் (gonad cells) மட்டும்தான் நடக்கும்.

புரியாத புதிர்கள் 

குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்‌