UNLEASH THE UNTOLD

‘அழகை ஆராதித்துதான் ஆகவேண்டுமா ?’

ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.

பிள்ளைகளுக்கான பரிசு!

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

புத்தம் சரணம் கச்சாமி

தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையைத் தவறான விதத்தில் முன்னெடுக்கும்போது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது.

மூளையில் ஆரம்பிக்கும் மெனோபாஸ்

கருமுட்டை தூண்டும் இயக்குநீர் கரு முட்டை வளர்ச்சியைக் குறைக்கும். இதற்கெல்லாம் முன்பே மெனோபாஸ் ஓர் இடத்தில் ஆரம்பிக்கும். நாம் கர்ப்பப்பை, ஓவரியில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மெனோபாஸ் என நினைக்கிறோம் இல்லையா, உண்மையில் மெனோபாஸ் மூளையில்தான் ஆரம்பிக்கிறது.

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு.

'பாஸிட்டிவ்' கௌசல்யா

கௌசல்யாவுக்குத் திருமணம் முடிந்த 20 நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் போனதும், பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவைக் கண்ட மருத்துவர், கெளசல்யாவின் கணவரை அழைத்து வரச் சொன்னார். அவருக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில், இருவருக்கும் எச்ஐவி இருப்பது தெரியவந்தது. கௌசல்யாவின் கணவருக்குத் திருமணத்திற்கு முன்பே எச்ஐவி இருந்திருக்கிறது. அதனை மறைத்து அவருக்குத் திருமணம் முடித்துவிட்டார்கள்.

நகரத்தைத் தகர்க்கலாம்; கருத்துகளைத் தகர்க்க முடியாது!

முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறுவது அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. கேப்டன்களாகப் பணிபுரியும் தங்கள் கணவருக்கு மனைவிகள் எவ்வாறு புத்தகத்தை அனுப்பினர் என்பதும், அதனைப் பதுங்குக்குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்களின் சொசைட்டி 350 நூலகங்களைப் பாசறையில் தொடங்கியது யுத்தமுனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்புதான் தப்பியதற்கும் நிலை தடுமாறாதிருக்கவும் உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.

குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்...

‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ஈஸ்ட்ரோஜன் என்ன செய்யும்?

ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் ஹார்மோன். அது இனப்பெருக்க வயதில் பெண்களுக்கு மிக அதிகமாகச் சுரக்கும். பெண்களின் மார்பு வளர்ச்சி, பருவம் அடைதல், பருவம் அடையும்போது உருவாகும் முடி, பெண் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

பெண்கள் பேய்களைப் பிடித்துக்கொண்ட கதை

அமைதி, மென்மை, கற்பு என்றெல்லாம் அடக்கியாளப்பட்ட பெண்கள் பேய் பிடித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுதலையடைகின்றனர். அதுவரையிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருந்த கோபங்களையும் கொண்டாட்டங்களையும் ஆற்றலையும் பேயினூடனாக வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.