UNLEASH THE UNTOLD

நாராயணி சுப்ரமணியன்

ராமன் எத்தனை ராமனடி

Leaky Pipeline என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. பத்து அடி கொண்ட ஒரு குழாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு அடிக்கு ஒருமுறை ஓர் ஓட்டை இருக்கிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதற்குள் தண்ணீரை ஊற்றினால், இரண்டு அடிக்கு ஒருமுறை தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வரும், இல்லையா? அதிலும் குழாயின் இறுதிக்கு வந்துசேரும் நீர் மிகவும் குறைவாகத்தானே இருக்கும்? அறிவியல் துறையிலும் அதுதான் நடக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அறிவியலில் பள்ளிப் படிப்பு – இளங்கலை – முதுகலை – முனைவர் பட்டம் – வேலை என்று ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி

மரி-சோஃபி ஜெர்மைன் என்கிற பிரெஞ்சு கணிதவியலாளருக்குக் குழந்தைப்பருவத்திலிருந்தே கணிதத்தில் அதிகமான ஆர்வம் இருந்தது. வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படித்து தனது கணித அறிவுக்கு சோஃபி தீனி போட்டுக்கொண்டார். 1794இல் அவர் வசித்த ஊரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. பெண் என்பதால் அந்தக் கல்லூரியில் சேர சோஃபிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், “யாராவது விரும்பினால் பாடக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பாடக்குறிப்புகளைப் படித்து தங்களுடைய கருத்துகளையும் புரிதல்களையும் பேராசிரியர்களுக்கு அனுப்பவும் அனுமதி இருந்தது.

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

எதிர்காலம்?

பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

பால்புதுமையினரும் சூழலும்

“பாலினம், பால்சார் ஒடுக்குமுறை, இனவெறி, பால்புது நபர்கள் மீதான வெறுப்பு ஆகியவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், இவை சக மனிதர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றியமைக்கின்றன” என்கிறார் அசமே ஔர்கியா. இந்த ஒடுக்குமுறைகளும் சூழலியலும் இணையும் இடம்தாம் குயர் சூழலியல். இதே குயர் சூழலியலை அடிப்படையாக வைத்து சமகாலத்தின் சூழல்சார்ந்த பிரச்னைகளை அணுகுவது அவசியம். சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.

அழிக்கப்படும் கால்தடங்கள்

எது உண்ணத் தகுந்த தாவரம் என்று கண்டுபிடிப்பது, விதைகளை வேதிப்பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பது, குறைவான செலவில் சிறு தோட்டங்கள் அமைப்பது, வளங்குன்றா முறையில் காடுகளிலிருந்து உணவு சேகரிப்பது, மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு சரியான முறையில் பயன்படுத்துவது. வளங்குன்றா கால்நடை பராமரிப்பு, தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே வரப்போகும் பருவநிலையைக் கணிப்பது என்று இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அட, இவ்வளவு ஏன்? கோவிட் காலத்தில் வழக்கமான உணவுப் பொருட்கள் கிடைக்காதபோது, ஒடிசாவின் பழங்குடிப் பெண்கள் தங்களது குடியிருப்புக்கு அருகில் இருந்த காடுகளில் இருந்து மட்டும் 111 வகையான உண்ணத்தகுந்த பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்! பழங்கள், கீரைகள், கிழங்குகள், காளான்கள் என்று எல்லாமே இதில் அடங்கும்.

நச்சு உலோகங்களின் அச்சுறுத்தல்

ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நச்சு உலோகத்தின் அளவு, அவரது பால், வயது, பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக நச்சு உலோகங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலும் பால்சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரே அளவிலான நச்சு உலோகம் உடலுக்குள் சென்றாலும் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்களின் உடல் இயங்கியல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.