UNLEASH THE UNTOLD

நிவேதிதா லூயிஸ்

மக்கள் ஓவியர் இளையராஜா

” கலைஞர்களுக்கு மட்டுமே மரணமில்லா வாழ்க்கை உண்டு. நாம் விட்டுப் போகும் இந்த படைப்புகள் தான் நாம் மரணமில்லாமல் வாழும் வாழ்க்கைக்கான அடையாளங்கள்.”

அது ஒரு சைக்கிள் காலம்

மேல்தட்டு மாணவிகள் கைனடிக் ஹோண்டாவில் பறந்து சென்று எங்களுக்கு முன் சைக்கிள்/பைக் ஸ்டாண்டில் வண்டியை விடும்போது கரகர சத்தத்துடன் விழிக்கும் கேப்டனை பரிதாபமாகப் பார்த்துக்கொள்வேன். வேலைக்குப் போனதும் பைக் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தோன்றியது தான்.

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்- சுசீலா சுந்தரி

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

விட்டு விலகுவதைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள்.

உலகின் முதல் பெண் கப்பல் உரிமையாளர் சங்கத் தலைவர்- சுமதி மொரார்ஜி

“மொத்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?”
“பாபுஜி, ஒரு வேளை நான் அப்படி செய்து இருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்கு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள் தானே?”

டைட்டானிக்கின் ஹீரோயின் யார்?

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!

முதல் பெண்கள்

பர்தா முறையைப் பின்பற்றாமல், ஆண்களுடன் அரசவையில் வாதம்செய்து, ஆணைகள் பிறப்பித்து, சிங்கம்போல வலம் வந்தாள். படைகளை வழிநடத்தினாள். நஸ்ரியா பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வானியல், கணிதம் என பல பிரிவுகளை நிறுவினாள். ‘வல்லமைமிக்க சுல்தான்’ என்று அச்சிடப்பட்ட செப்பு மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டாள்.