UNLEASH THE UNTOLD

பெண்ணூல்

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

காதலுக்காக காபூலுக்குத் தப்பிச் சென்ற இந்தியப் பெண்

பெண்களைச் சித்திரவதைச் செய்வது என்பது இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை எந்த ஆணுக்கும் பெரும் வீரச் செயல். என் கணவர் வீட்டில் ஒரு கணம்கூட அமைதியான சிந்தனைக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தானில் எந்தப் பெண்ணுக்கும் சிந்திக்கவோ கூர்ந்து ஆராயவோ இடமில்லை. சாப்பிடுவீர்கள், அரட்டையடிப்பீர்கள், இருட்டியதும் விளக்குகளுடன் உங்கள் அறைகளுக்குச் சென்றுவிடுவீர்கள். மரபுகள், அடிப்படைவாதம், அறியாமை, கல்வியின்மை ஆகியவற்றின் உறையும் நிழலை எதிர்த்துப் போராடுங்கள். இது வறுமை மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டம். இங்கே எப்படிப் புதிய சிந்தனைகளின் விதைகள் முளைக்கும்? எப்படி ஒருவர் வித்தியாசமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ள முடியும்?

'தேவதை' எப்படிச் 'சூனியக்காரி'யாக மாற்றப்பட்டார்?

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம்!

பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும்.          நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள்.

பெண் விடுதலைக்கான நூல்

ஒருவர் சுயபரிவுடன் இருந்தால்தான் சக்தியோடு இயங்க முடியும் என்கிற கோணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுயபரிவு இன்மைதான் பெண்களைச் சுய பச்சாதாபத்தில் தள்ளி சக்தி இல்லாதவர்களாக மாற்றுகிறது. கற்பு என்னும் ஒற்றைச் சொல்லைக் கொண்டே பெண்களின் புத்தி மழுக்கடிக்கப்பட்டு, உணர்வுகள் தூண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சாடுகிறார் ஆசிரியர். பெண்களின் சம்பாத்தியம், தனித்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இவையெல்லாம் பெண்களின் உரிமை என்கிறார்.

நிராகரித்தலின் கனவு

‘நிராகரித்தலின் கனவு.’ பெண், ஆண் உறவென்பது மிகச் சிக்கலானது, மிக நுட்பமானது, மிக சுவாரசியமானது. ஒரு பெண்ணின் பேருந்துப் பயணம் குறிப்பாக இரவு நேரப் பயணம் தரும் அச்சம், அதே நேரத்தில் மழை தரும் இதம் என்று ஒவ்வொன்றையும் மொழிவழி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். குழந்தையின்மை பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை உளவியல் சார்ந்து செறிவாகப் புலப்படுத்தியுள்ளார் .

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

தடைகளைத் தாண்டிய பயணம்!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் ரமாதேவியின் பெட்டி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, “ஒரு வாரமாகப் பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது” என்று குறிப்பிடுகிறார். இந்த மொழி நடை, கையாண்ட ஒப்புமைகள் எல்லாம் வாசகர்களுக்கு ரமாதேவி என்கிற பெண்ணின் அபார தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. எல்லா அனுபவங்களையும்தான் தனக்கு நியமித்து கொண்ட விதிகளின் வழியே (in her own terms) தைரியமாகப் பார்க்கும் ஒரு சாதனைப் பெண்ணாக மலர்கிறார் எழுத்தாளர்.

உடை பற்றிய உரிமைக்குரல்

ஆடைகள் சீராக மடிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக இருப்பதுபோல் அடுக்கப்பட்டிருந்தன… எல்லாவற்றையும் தாண்டி பெட்டியின் வலதுபக்கமாக ஓரத்தில் இரண்டு கருப்பு நிற பர்தாக்கள் அந்நியமாக விலகியிருந்தன.