UNLEASH THE UNTOLD

பெண்ணூல்

அகத்தில் நுழைந்தேன்; அகத்தில் அமிழ்ந்தேன்!

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது.

தடைகளைத் தாண்டிய பயணம்!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் ரமாதேவியின் பெட்டி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, “ஒரு வாரமாகப் பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது” என்று குறிப்பிடுகிறார். இந்த மொழி நடை, கையாண்ட ஒப்புமைகள் எல்லாம் வாசகர்களுக்கு ரமாதேவி என்கிற பெண்ணின் அபார தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. எல்லா அனுபவங்களையும்தான் தனக்கு நியமித்து கொண்ட விதிகளின் வழியே (in her own terms) தைரியமாகப் பார்க்கும் ஒரு சாதனைப் பெண்ணாக மலர்கிறார் எழுத்தாளர்.

உடை பற்றிய உரிமைக்குரல்

ஆடைகள் சீராக மடிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக இருப்பதுபோல் அடுக்கப்பட்டிருந்தன… எல்லாவற்றையும் தாண்டி பெட்டியின் வலதுபக்கமாக ஓரத்தில் இரண்டு கருப்பு நிற பர்தாக்கள் அந்நியமாக விலகியிருந்தன.

பெண் எனும் போன்சாய்

ஆற்றின் வெள்ளம்போல்

வாழ்க்கைக் கடக்கும்

கையளவு நீர் மட்டுமே கிடைக்கும்

அதை அமிர்தமாக்குவதும்

அழுக்காக்குவதுமே வாழ்க்கை!

நமது காலத்தின் பின்னும்

ஆறு அதனோட்ட்டம் தொடரும்!

புத்தம் புதிய வெளிச்சம்!

குழந்தைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைப் பருவம்தான் நாம் குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து.
ஏதோ ஒரு தலைமுறையில் யாரோ தொடங்கிய தவறுகளை தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. தீமைகளைத் தடுக்க சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மலை தடுக்கிறது எனப் பயந்து நிற்க வேண்டாம், துணிந்து ஒவ்வோர் அடியாக எடுத்து நடக்க தொடங்கினால் போதும் மலையையும் எளிதாகக் கடந்துவிடலாம்.

வெற்றி கொள்ள முழு வாழ்க்கையே இருக்கிறது!

‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.

கலகப் புத்தகம்

மிலெவா மாரிட்ச், ஐன்ஸ்டீனைவிட அறிவாளி, ஐன்ஸ்டைனின் ஆராய்ச்சிகளில் அவருக்குப் பெரிதும் உதவியவர், ஆயினும் பெண் என்பதால் அவரது பங்களிப்புகள் புறந்தள்ளப்பட்டன. ஐன்ஸ்டைன் கல்லூரி வகுப்பு எடுக்க நோட்ஸ் எடுப்பது, அவரது கல்லூரி உரைக்கான குறிப்புகளைக் கைப்பட எழுதியது உள்ளிட்டவற்றைச் செய்தவர் மிலெவா.

பொறுத்தது போதும், பொங்கி எழு...

ஏன் இந்தப் பயணங்களை மேற்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, ‘குடும்ப வன்முறைகளிலிருந்து உயிர் பிழைத்ததற்காக, எனக்காக வாழ வேண்டும் என்பதற்காக, வாழ்க்கையில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதற்காக, சாவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி போன்ற எந்தக் காரணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிற கிராண்ட்மா கேட்வுட்டின் வரிகளைப் படித்ததும் என் மனதை ஏதோ செய்தது.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் என்றால் பிடிக்காது. அவர்களது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று கூறுகிறார். இன்று பல குழந்தைகள் யூடியூப் வீடியோக்கள் பார்த்தே பொழுதைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வைக் கொண்டாடலாம் என்று பெற்றோர் மனதில் விதைக்கிறார்.

இன்றைய தலைமுறைக்கு இன்னும் வலுவான தேவி தேவை...

இந்த நாவலின் ஆரம்பத்திலேயே தேவி படித்தவளாக, சுய சிந்தனை உடையவளாக, தப்பைத் தட்டிக் கேட்கிறவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஓர் ஏழைப் பெண்ணை ஒருவன் அவமானப்படுத்தியதற்கு ஓர் ஆண் என்று ஒதுங்கி விடாமல் அவனை எதிர் கேள்வி கேட்கிறாள்.