UNLEASH THE UNTOLD

ஜெ. தீபலக்ஷ்மி

இனிமே நான் உனக்கு வேண்டாமா, நிலா?

வருண் மௌனமாக அவள் விட்டெறிந்த பிரஷ்ஷை எடுத்து அதிலிருந்த முடிக்கற்றைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இல்ல, வர வர என்னை நீ ரொம்ப இக்னோர் பண்ற மாதிரி இருக்கு.”

“ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டார்ச்சர் பண்ணாதே” என்று அவசரமாகக் கிளம்பத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டிருந்த முகத்தில் லேசான எரிச்சல்.

வருணுக்கு அழுகை வந்தது. தன் உணர்வுகளை மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. இவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் அலட்சியப்படுத்துகிறாளே.

ஜாலி டூர் போவானா சிபி?

வெள்ளிக்கிழமை மாலை ட்ரெயின். ஒரு வாரமாகப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறான் சிபி. தான் வீட்டில் இல்லாத நான்கு நாளைக்கும் ஆதிக்குத் தேவையான உடைகளை அயர்ன் பண்ணி வைத்தாயிற்று. குழந்தைக்கான ஸ்னாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும், லஞ்ச் என்ன கொடுக்க வேண்டும் என்று எழுதி ஃப்ரிஜ்ஜின் மீது ஓட்டி வைத்தான். என்னென்ன பொருள் எங்கெங்கு இருக்கிறது என்பது உட்பட. தோசை மாவு, அடை மாவு அரைத்து வைத்து சேஷாத்ரியின் உதவியுடன் வீடு முழுவதும் பளிங்கு போல் துப்புரவு செய்து, அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மடித்து வைத்து, மாமா அத்தைக்குத் தேவையான மாத்திரைகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து இல்லாததை வாங்கி வைத்து, அப்பப்பா…

அந்தக் கொடூரத்தை நிலா புரிந்துகொள்வாளா?

“வருண் தங்கம், தயவு செஞ்சு இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. யார் கிட்டயும் இதைச் சொல்லிடாதே. உங்க மாமாவைப் பத்தி நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்டி என் மகனையே…” தலையில் அடித்துக்கொண்டு அப்பா அழுததைப் பார்க்க வருணால் பொறுக்க முடியவில்லை.

தட்டை மாத்திக்கலாமா?

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் மேனி ஒரு வாரத்தில் கறுத்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மொட்டை மாடியில் மகனை நிற்க வைத்தார் அப்பா பரமசிவன். அருண் மயங்கி விழுந்து அக்கம்பக்கத்தினர் தூக்கிக்கொண்டு வந்ததும் பரமசிவனின் மனைவி பார்வதி, “என் புள்ளைய இனிமே இப்படிக் கொடுமைப்படுத்துன, நடக்குறதே வேற” என்று கணவனை நையப்புடைத்ததும் வரலாறு.

சிபியும் கண்ணனும்

எல்லாருக்கும் டீயையும் புன்சிரிப்பையும் தந்துவிட்டு, ஒரு நிமிடம் ஃபேனின் கீழே அமர்ந்து ஒரு வாய் டீ குடிக்கப் போனான். உள்ளிருந்து மாமனாரின் முனகல் கேட்டவுடன் டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.

அவனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்த இனியா, அவன் புகழைப் பாடத் தொடங்கினாள். இடையில் வந்து சேர்ந்துகொண்ட ஆதியும் கண்ணனின் சமையல் வாசத்தையும் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பாங்கையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தாள்.

உனக்குத் துரோகம் பண்ணுவேனா?

சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.

பிறந்தநாள் கொண்டாட்டம்!

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.

ஆண் டெவலபர்...

மீட்டிங்கில் அமர்ந்திருந்த ஏனைய ப்ரோக்ராமர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தனர். முக்கியமான ப்ராஜெக்டின் டெட்லைன் நெருங்கிவிட்டது. அதற்காகக் கூட்டப்பட்டிருந்த மீட்டிங் அது. அதில்தான் தன்னை முன்னிலைப் படுத்தி கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான் ஸ்ரீனிவாஸ்.

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...

சிபியின் வேலை சுறுசுறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த ராஜுவுக்கு அதுவரை சிபிக்கு பிரமோஷன் கிடைத்தது குறித்து எந்தப் பொருமலும் இருக்கவில்லை. சிபியின் இனிய பண்பினாலும் உதவும் மனப்பான்மையாலும் பணியிடத்தில் நல்லவிதமாகவே அறியப்பட்டிருந்தான். ஆனால், இப்போது இந்தப் பேச்சைக் கேட்டதும் ராஜுவுக்குச் சுருக்கென்றது.

மாமியார் மெச்சும் மருமகன்!

ஆதிக்குச் சுர்ரென்று கோபம் மூண்டது. “ஆரம்பிச்சிட்டியா? அதான் ஒண்ணா இருக்க முடியலன்னு என்னைப் பிரிச்சிக் கூட்டி வந்துட்டே. எங்கம்மா எப்பவோ வராங்க என்னைப் பார்க்க. அவங்களுக்காகச் சமைக்க நீ கஷ்டப்பட வேண்டாம். நான் ஆர்டர் பண்ணிக்கிறேன்.”