உணர்வு சூழ் உலகம்
எந்த உணர்வும் அது மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம் எதுவாகினும் அதன் அளவு கூடும்போது அது நமது நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. அப்போது நாம் அதை வெளிப்படுத்தும் வழி பின்னாளில் நம்மை வருந்த வைக்கலாம் அல்லது மாற்ற முடியாத இழப்பை உண்டு பண்ணலாம். அந்தந்த நேரத்து உணர்வைச் சரியாகக் கையாள்வதின் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.