UNLEASH THE UNTOLD

Month: October 2022

சுய கட்டுப்பாடே சுதந்திரம்!

என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!

வாழ்க்கையின் பூரணத்துவம்!

மகிழ்ச்சிக்கான காரணங்கள் நிறைந்த வாழ்க்கையில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் எல்லாருமே, எல்லாருடைய வாழ்க்கையுமே perfectly imperfect. அதுவே வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் முழுமையானதும் கூட!

அஞ்சல் தலைகளில் அண்ணல் காந்தி

காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.

அடர்வனத்திற்குள் ஒரு சோகக் கதை

300 வகையான ராமாயணங்களில் வெவ்வேறு கதைகள் உண்டு என்று கூறப்படுவது ஒருபுறமிருக்க, தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றுத் திரிபுகளால் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்டு, அரக்கனாக்கப்பட்டு விட்டான் என்ற பெருங்குறையொன்றுடன் இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.