பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும்.
யணங்கள் நமது ஆளுமையைச் செறிவூட்டுகின்றன. மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கின்றன. நமது சுயத்திற்குப் புதிய பரிமாணங்களை அளிக்கின்றன. பரவசமூட்டுகின்றன.